குறைந்த Repo விகிதம்.. ஹவுஸ் லோன், ஆட்டோமொபைல் லோன் இருக்கிறதா? இதை செய்தால் இஎம்ஐ குறையும்!
சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பணவியல் கொள்கைக் குழு (MPC) ரெப்போ ரேட் விகிதத்தை குறைக்கும் முடிவை எடுத்துள்ளது. அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படைப் புள்ளிகள் (bps) குறைக்கப்பட்டு, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 5.25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இம்முடிவு, நாட்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 8.2% ஆக அதிகரித்திருப்பதையும், சராசரி மொத்தப் பணவீக்கம் 1.7% ஆகக் குறைந்திருப்பதையும் தொடர்ந்து வந்துள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 4% பணவீக்க இலக்கின் குறைந்தபட்ச சகிப்புத்தன்மை வரம்பான 2% ஐயும் தாண்டி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சாதகமான புள்ளிவிவரங்கள் வட்டி விகிதக் குறைப்புக்கு வழிவகுத்தன.

ரெப்போ ரேட் குறைப்பு
ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா டிசம்பர் 11, 2024 அன்று பதவியேற்ற பிறகு, ரெப்போ விகிதம் குறைக்கப்படுவது இது நான்காவது முறையாகும். இதன் மூலம், மொத்தம் 125 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறைப்பு கடன் வாங்குபவர்களுக்கும் சேமிப்பாளர்களுக்கும் குறைந்த வட்டி விகிதங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சாதகமான ஒரு சூழலை உருவாக்கும்.
ரெப்போ விகிதக் குறைப்புக்குப் பிறகு, பணப்புழக்க சீரமைப்பு வசதியின் (LAF) கீழ் நிலையான வைப்பு வசதி (SDF) விகிதம் 5% ஆகவும், விளிம்பு நிலைக் கடன் வசதி (MSF) விகிதம் மற்றும் வங்கிக் கடன் விகிதம் 5.50% ஆகவும் சரிசெய்யப்படும். மேலும், MPC வட்டி விகிதங்கள் அதிகரிக்கவோ அல்லது மேலும் குறையவோ வாய்ப்புள்ளதைக் குறிக்கும் நடுநிலையான நிலைப்பாட்டைத் தொடரவும் முடிவெடுத்துள்ளது.
உங்கள் இஎம்ஐ குறையும்
இந்த நடவடிக்கை புதிய வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகள் இந்த குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினால், அவர்களின் மாதாந்திர EMI குறையும் வாய்ப்புள்ளது.
இந்த வட்டி விகித மாற்றங்கள் இந்த மாதம் செய்யப்பட்டாலும் அடுத்த மாதம் வசூலிக்கப்படும் இஎம்ஐயில் அமலுக்கு வரும்.
ஆனால் பல நிறுவனங்கள் இதுவரை இந்த மாற்றங்களுக்கான சார்ட்டை வெளியிட்டாலும் கடனாளிகளுக்கு அதை நோட்டிப்பை செய்யவில்லை. அதாவது கடனாளிகள் இந்த மாற்றம் காரணமாக இஎம்ஐ அல்லது கடன் செலுத்தும் காலம் இரண்டில் ஒன்றை குறைத்துக்கொள்ள முடியும். ஆனால் வங்கிகள் இதில் இன்னும் கடனாளிகளிடம் விருப்பத்தை கேட்கவில்லை.
கடனாளிகள் விருப்பம் இன்றி இதில் வங்கிகள் முடிவு எடுக்க கூடாது என்ற விதி உள்ளது. இந்த நிலையில் HDFC உள்ளிட்ட சில வங்கிகள் கடனாளிகளிடம் விருப்பத்தை கேட்டு இஎம்ஐ அல்லது கடன் செலுத்தும் காலம் இரண்டில் ஒன்றை குறைக்க உள்ளது. ஆனால் சில வங்கிகள் குறைக்கவில்லை. உங்கள் வங்கி இஎம்ஐ அல்லது கடன் செலுத்தும் காலம் இரண்டில் ஒன்றை குறைக்காத பட்சத்தில் நீங்கள் உங்கள் கிளையில் ஒரு கடிதம் எழுதி இரண்டில் ஒன்றை.. உங்களுக்கு விருப்பமான ஒன்றை குறைக்கும்படி கூற வேண்டும்.
வீட்டுக் கடன் EMI-யில் எவ்வளவு குறையும்?
ஒரு கடன் வாங்குபவர் 20 வருட காலத்திற்கு ₹50 லட்சம் கடன் எடுத்திருந்தால், மாதாந்திர வீட்டுக் கடன் EMI சுமார் ₹2,000 வரை குறையும்.
நீங்கள் ₹50 லட்சம் கடனை 20 வருடங்களுக்கு எடுத்திருந்தால், மாதாந்திர EMI-யில் சுமார் ₹1,960 வரை சேமிக்க முடியும். கடனின் ஆயுட்காலத்தில் சுமார் ₹4.7 லட்சம் வரை சேமிக்க முடியும்.
₹30 லட்சம் கடனை 20 வருடங்களுக்கு எடுத்த வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு, மாத EMI-யில் சுமார் ₹1,176 குறையும். மேலும், கடன் வாங்குபவர்கள் தங்கள் EMI-களைக் குறைக்கலாம் அல்லது தற்போதுள்ள EMI தொகையைத் தொடர்ந்து செலுத்தி கடனின் tenure அதாவது காலத்தை குறைக்கலாம். இதன் மூலம் அதிக வட்டி சேமிக்க முடியும்.
இதன் பொருள், சமீபத்திய காலாண்டுகளில் வீடு வாங்கும் முடிவை தாமதப்படுத்தியவர்கள், இப்போது தங்கள் கனவு இல்லத்தை வாங்க ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. ஏனெனில், அவர்கள் ₹50 லட்சம் வீட்டுக் கடனுக்கு மாத EMI-யில் சுமார் ₹3,800 முதல் ₹4,000 வரை நிவாரணம் பெறுவார்கள்.
ரிசர்வ் வங்கியின் இந்த ரெப்போ விகித குறைப்பு, வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. EMI தொகையில் கணிசமான அளவு குறையும் என்பதால் வீடு வாங்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு இது ஒரு சாதகமான நேரமாகும்.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி












Click it and Unblock the Notifications