"பூனைக்குட்டி" வெளியே வருகிறது.. "தலைவரிடம்" இருந்து பறந்த இன்ஸ்ட்ரக்ஷன்.. கப்சிப் ஆன ஓபிஎஸ்
எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இரு தரப்பிலும் இருவிதமான கணக்கு போடப்பட்டு வருகிறது
சென்னை: அதிமுகவில் 3 முக்கிய விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.. நாளுக்கு நாள் இந்த பிரச்சனை அதிகமாகி கொண்டே போகும் நிலையில், பரபரப்புகளும், கவலைகளும் தொண்டர்களிடம் கூடி வருகிறது.
Recommended Video
அதிமுக 2 ஆகி பிரிந்துவிட்டது.. இதில் மெஜாரிட்டியுடன் எடப்பாடி திகழ்கிறார்.. ஆனால், எடப்பாடி டீமுக்குள்ளேயே புகைச்சல்கள் கிளம்பிவிட்டன.
மூத்த தலைவர் பொன்னையனின் ஆடியோ பதிவு மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.. மிமிக்ரி என்ற ஒரே வார்த்தையில் பொன்னையன் முடித்து கொண்டாலும், அந்த ஆடியோவின் உண்மைகள் பல விஷயங்களை பதிவிட்டு போயுள்ளது..

விடுங்க.. தேவையில்லாதது
இந்த பரபரப்புக்கு நடுவில்தான், அமைச்சர் பொன்னையனுக்கு அதிமுகவில் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனையொட்டி பொன்னையன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வந்தார்... அப்போது அதிமுகவில் புதிய பொறுப்பு வழங்கியதற்காக நன்றி தெரிவித்து வாழ்த்தும் பெற்றுக்கொண்டார். அப்போது வெளிவந்த ஆடியோவிற்கு பொன்னையன் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. அதற்கு எடப்பாடி, இந்த பிரச்சனை தேவையில்லாதது, இனிமேல் இப்படி யாரிடமும் பேச கூடாது என்று அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

வைத்திலிங்கம்
இதற்கு நடுவில், ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் இன்னொரு குண்டை தூக்கிப்போட்டு விட்டு போயுள்ளார்.. "பொன்னையன் ஆடியோ கேட்டு இருப்பீங்க.. கூடிய சீக்கரம் பல ஆடியோக்கள் வரும்" என்றார்.. இது எடப்பாடி தரப்பை மேலும் கிலிக்கு ஆளாக்கி உள்ளதாம். மெஜாரிட்டி தன்பக்கம் இருப்பதாக எடப்பாடி பெருத்த நம்பிக்கையுடன் இருக்கும்போது, இந்த ஆடியோக்கள் வெளிவந்தால்தான், எத்தனை பூனைக்குட்டிகள் வெளியே வரப்போகின்றன என்பது தெரியவரும் என்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி
அதேபோல, இன்னொரு விஷயமும் கட்சிக்குள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.. ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது? எப்படி வாக்களிப்பது? என்பதெல்லாம் குறித்துவிவாதிக்க அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டத்தை 17-ந்தேதி கூட்டவிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவில் அதிகார மோதலில் அக்கட்சியின் அலுவலகமும் தமிழக அரசால் இழுத்து மூடப்பட்டுவிட்டது.. அதனால், அந்த கூட்டத்தை எங்கு நடத்துவது? என்பது இன்னும் முடிவாகவில்லை... ஆனால், எங்கு நடந்தாலும், ஓபிஎஸ், வைத்தியலிங்கம் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படாது என்று எடப்பாடி தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாம்.

இன்ஸ்ட்ரக்ஷன்
அதிமுகவிலிருந்து இவர்களை எடப்பாடி நீக்கினாலும், அவர்கள் இப்போதும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தான். ஆனால், கட்சியை விட்டு நீக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு எந்த இன்ஸ்ட்ரக்ஷனையும் தரத்தேவையில்லை என்கிறாராம் எடப்பாடி... அதேபோல, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று உரிமையை நிலை நாட்டிவரும் ஓபிஎஸ், ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது குறித்து விவாதிக்க எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்க யோசித்தாராம்.

மனோஜ்
ஆனால், வைத்தியலிங்கமும், மனோஜ் பாண்டியனும், எம்எல்ஏக்களுக்கு நீங்கள் அழைப்பு விடுத்து யாருமே வரவில்லை என்றால், அது உங்களின் இமேஜை பாதிக்கும். அதனால், எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டலாம் என நினைப்பதே தவறு என்று சொல்லியிருக்கிறார்கள்... ஏற்கனவே கடந்த மாதம் இப்படித்தான் ஒரு சிக்கல் எழுந்தது.. ஒற்றை தலைமைக்கு எத்தனை பேர் ஆதரவு தருகிறார்கள் என்பதை, ஓட்டளிப்பு மூலம் நிரூபிக்கலாம் என்று கட்சிக்குள் முடிவு செய்யப்பட்டதாம்.. ஆனால், இதை சில மூத்த தலைவர்களே வேண்டாம் என்று ஓபிஎஸ்ஸிடம் சொன்னார்கள்.

வைத்திலிங்கம்
ஓட்டெடுப்பு என்று இறங்கினால், எடப்பாடிக்குதான் நிறைய ஆதரவு கிடைக்கும்.. உங்கள் பக்கம் ஆதரவு குறைந்துவிட்டால், இருக்கும் இமேஜ்கூட இன்னும் குறைந்துவிடும்.. கட்சிக்குள் செல்வாக்கும் போய்விடும்.., அதனால், ஓட்டெடுப்புக்கு ஒப்புக் கொள்ள வேண்டாம் என்று சொல்லி அந்த விஷயத்தையே ஆஃப் செய்துவிட்டார்களாம்.. அதற்கு பிறகுதான் ஓபிஎஸ், சட்டரீதியான நடவடிக்கைக்கு தீவிரமானார் என்கிறார்கள்.. இப்போதும், சட்டத்தையும், பாஜக மேலிடத்தையும், தேர்தல் ஆணையத்தையும் மட்டுமே ஓபிஎஸ் நம்பி உள்ளபோது, அவருக்கான ஆதரவாளர்கள் குறைவு என்பதையும் அவர் நன்கே உணர்ந்துள்ளாராம்.
-
TVK Vijay: 234 தொகுதிகளுக்கும் வொர்த்தான ஆள் இருக்காங்களா? வேட்பாளர் தேர்விலும் விஜய்க்கு குழப்பம்! -
பல் போன பாட்டி முதல் பல் முளைக்காத குழந்தை வரை திமுக அரசில் பாதுகாப்பு இல்லை: நடிகை விந்தியா பொளேர் -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications