சிக்கலில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.. '13ஆம் தேதி இருக்கு'.. சோதனை தீருமா? பிரச்சனை நேருமா?
சென்னை : அதிமுக மோதல் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை விடாமல் விளாசி வரும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வரும் செப்டம்பர் 13ஆம் தேதி சிக்கல் தீரப்போகிறதா? சோதனை வரப்போகிறதா? எனக் கேள்வி எழுந்துள்ளது.
நில மோசடி தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமாரின் சகோதரர் மகேஷ் புகார் அளித்திருந்தார்.
நில மோசடி புகாரில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து வழக்கில் செப்டம்பர் 13ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
இந்த வழக்கில் அமைச்சர் தெரிவித்த வாதங்களுக்கு, மகேஷ் தரப்பில் தகுந்த பதில் சொல்லப்பட்டுள்ளதால், தீர்ப்பு ஜெயக்குமாருக்கு எதிராக வரக்கூடும் என்று கூறப்படுகிறது.

உறவினர் நில மோசடி புகார்
சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இதில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்திருந்தார்.

ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு
இந்த புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயபிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தன் மீதான அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.

அமைச்சராக இருந்ததால்
மகேஷ் அளித்த பொய் புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு அது என்றும், 2016-ல் நடந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு 2021-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதில் உள்நோக்கம் உள்ளது என்றும் ஜெயக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு 2016ஆம் ஆண்டு முதல் 2021 வரை ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததால், அவர் மீது புகார் அளிக்க இயலவில்லை என்று புகார்தாரர் மகேஷ் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.

13ஆம் தேதி
இதையடுத்து இந்த வழக்கில் செப்டம்பர் 13-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக மோதல் விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி பக்கம் நின்று, ஓ.பன்னீர்செல்வம் தரப்பை விளாசி வரும் ஜெயக்குமாருக்கு, இந்த வழக்கு உத்தரவு சாதகமாக வரப்போகிறதா? சிக்கலைத் தரப்போகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications