தைரியமாக எழுதுங்கள்... எல்லோரும் ஜெயிக்கலாம்... மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் வாழ்த்து
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தைரியமாக தேர்வு எழுதுங்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னை: தைரியமாகவும் மகிழ்ச்சியாகவும் தேர்வு எழுதுங்கள் எனவும் பதற்றமடைய வேண்டாம் எனவும் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
மாணவர்கள் அனைவரும் தேர்ச்சியடையலாம் என்று துறையின் அமைச்சர் என்ற முறையில் வாழ்த்தியதாகவும் மாணவர்கள் எழுதுவதற்கு ஏற்ப மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

தமிழ்நாடு முழுவதும் 3,119 மையங்களில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. கொரோனா நோய்த் தொற்று 2020 ஆம் ஆண்டு முழு அளவில் தாக்கம் இருந்தது. ஆனால், அந்த சமயத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வு நடைபெற்றது. இதையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, பொது முடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இதேபோல் 2021 ஆம் ஆண்டிலும் பொதுமுடக்கம் தொடர்ந்த நிலையில், பொதுத் தேர்வு அனைத்தும் ரத்து செய்யப் பட்டன. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் பொதுத் தேர்வு முழு அளவில் நடத்தப்பட உள்ளது. அதன்படி பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி, தொடர்ந்து 28 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 3,91,343 மாணவர்களும் 4,31,341 மாணவிகளும் எழுதுகின்றனர். பொதுத் தேர்வில் 10 மணி முதல் 10.15 வரை மாணவர்கள் வினாத்தாளை படிக்கவும் அடுத்த 3மணி நேரம் விடை எழுதுவதற்கும் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல் புதுச்சேரியில் 14,627 மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதுகின்றனர். இன்று 12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் முதல்முறையாக பொதுத் தேர்வை எதிர்கொள்கின்றனர்.
10,11 வகுப்புகளில் பொதுத்தேர்வில் எழுதாத நிலையில், மாணவர்கள் முதல் முறையாக பொதுத் தேர்வை எழுதுகின்றனர். மேலும் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என்றும் பொது சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை சாந்தோம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மையத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தைரியமாகவும் மகிழ்ச்சியாகவும் தேர்வு எழுதுங்கள் எனவும் பதற்றமடைய வேண்டாம் எனவும் கூறியுள்ளதாக தெரிவித்தார்.
Recommended Video

தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களும் தேர்வுகளை தைரியமாக எழுத வேண்டும். அனைவரும் தேர்ச்சியடையலாம் என்றும் துறையின் அமைச்சர் என்ற முறையில் வாழ்த்தியதாகவும் தெரிவித்தார். மாணவர்கள் எழுதுவதற்கு ஏற்ப மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கூறினார்.
கொரோனா காலம் முடிந்து முதன் முறையாக மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். எனவே எவ்வளவு சீக்கிரம் பேப்பர்களை திருத்தி முடிவுகளை அறிவிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிவுகளை அறிவிப்போம் என்றார். ஜூலைக்குள் முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications