சோகம்.. ஆசையாய் விளையாடிய கோவை சிறுவர்கள்! அருகிலேயே இருந்த “ஆபத்து” - விழுங்கிய குளம்.. மூவரும் பலி
கோவை: சூலூரில் குளத்தின் அருகில் நின்று விளையாடிக்கொண்டு இருந்த 3 சிறுவர்கள் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே ஏரிகள், குளங்கள், ஓடைகள், கண்மாய்கள் போன்ற பல நீர்நிலைகள் நிரம்பிய நிலையிலேயே உள்ளன. தொடர்ந்து மழைபொழிவும் இருப்பதால் நீர் நிலைகள் செழிப்போடு உள்ளன.
ஒருபக்கம் மகிழ்ச்சியான தகவலாக இது இருந்தாலும் மறுபக்கம் இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் மகிழ்ச்சியோடு குளித்து வருகின்றனர்.

தொடரும் விபத்துக்கள்
ஆனால் போதிய நீச்சல் பயிற்சி இன்றி இளைஞர்கள், சிறுவர்கள் நீர்நிலைகளில் குளிப்பது, தடுப்புகள் இல்லாத நீர்நிலைகள் ஓரமாக சிறுவர்கள் விளையாடுவது, நீர்நிலைகளில் நின்றுகொண்டு செல்பி எடுப்பது போன்ற காரணங்களால் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நீர் நிலைகளில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

3 சிறுவர்கள்
இதே போன்ற சோக நிகழ்வுகள்தான் தற்போது கோவையில் நடந்து இருக்கிறது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள மதியழகன் நகரைச் சேர்ந்த சிறுவர்கள் அகிலன் (10), சஸ்வந்த் (8), சஞ்சீவ் (7) ஆகியோர் சூலூர் குளக்கரையில் விளையாடுவது வழக்கம். அதேபோல் இன்றும் குளக்கரையில் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

குளத்தில் மூழ்கி பலி
அப்போது மூவரும் குளத்தில் தவறி விழுந்தனர். இதனை அங்கு இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் நேரில் பார்த்துள்ளார். உடனடியாக குளத்திற்கு ஓடி செல்வதற்கு முன்பாகவே மூவரும் குளத்தில் மூழ்கி உள்ளனர். இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மூவரது உடலையும் மீட்டு சூலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பிரேத பரிசோதனை
அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று சிறுவர்களும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மூன்று சிறுவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
-
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications