கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதிப்பு
கோவை: தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய கோவை கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளார். முன்னதாக 3 பேரும் குற்றவாளிகள் என கோவை அனைத்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.
கோவை பீளமேடு விமான நிலையத்தின் பின்புறம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதி இரவு ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து 21 வயது கல்லூரி மாணவி பேசிக் கொண்டிருந்தாராம்.

அப்போது அங்கு மது போதையில் வந்த மூன்று பேர், கார் கதவை திறக்க சொல்லியிருக்கிறார்கள். இவர்கள் திறக்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. அப்போது கார் கண்ணாடிகளை உடைத்து கதவை திறந்தனராம்.
அப்போது அந்த பெண்ணை தொட முயன்ற போது ஆண் நண்பர் தடுத்துள்ளார். அவரை அந்த 3 பேரும் கடுமையாக தாக்கிவிட்டனர். இதனால் அவர் மயங்கிவிட்டார். பின்னர் அந்த பெண்ணை மூவரும் ஒதுக்குப்புறமான இடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதனிடையே மயக்கம் தெளிந்த ஆண் நண்பர், அந்த பெண்ணை சற்று தூரம் தேடி பார்த்துவிட்டு பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.
அப்போது அங்கிருந்த சுவருக்கு பின்னால் இருந்த மாணவியை பத்திரமாக மீட்டு, அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் அங்கிருந்த சிசிடிவி கேமராவை வைத்து அந்த 3 பேரும் வந்த இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து தேடி வந்தனர்.
அந்த 3 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய பிளமேடு காவல் துறையினர், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்கள் சதீஷ் என்கிற கருப்பசாமி (30), கார்த்திக் என்கிற காளீஸ்வரன் (21), மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த குணா என்கிற தவசி (20) ஆகியோரை பிடித்தனர்.
அப்போது அவர்கள் மூவரும் போலீஸார் தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது துடியலூர் அருகே துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். விமான நிலையம் பின்புறம் நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் 270 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த தடயங்கள், மரபணி பரிசோதனை முடிவுகள் உள்ளிட்டவையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கில் 112 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். கடந்த மாதம் 2ஆம் தேதி விசாரணை நடத்தப்பட்டது. கல்லூரி மாணவி, அவரது ஆண் நண்பர், மாணவியின் தாய் உள்ளிட்டோரும் சாட்சி அளித்தனர்.
இந்த விசாரணை 21 நாட்களில் முடிந்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்ட கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகிய 3 பேர் மதியம் 2.30 மணிக்கு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது கைது செய்யப்பட்ட 3 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பளித்தார்.
பின்னர் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. இதன்படி குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. தமிழகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த வழக்கின் தீர்ப்பு, சம்பவம் நடந்த 3 மாதங்களில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சியில் மாஸ்டர் பட வில்லன் பவானி பாணியில் ஸ்கெட்ச்.. திமுக கவுன்சிலர் வழக்கில் ட்விஸ்ட் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications