Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதா மரணம்.. ஆறுமுகசாமி அறிக்கை பற்றி ஒரேபோடாக போட்ட அன்புமணி ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: ‛‛ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகச்சாமி ஆணையத்தின் அறிக்கை புரோபஷனலாக இல்லை. டெக்னிக்கல் விஷயங்கள் இல்லை. இதை வைத்து அரசியல் வேண்டுமானால் செய்யலாம்'' என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 75 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் 2016ல் மரணமடைந்தார்.

இதேபோல் அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சராக இருந்தபோது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது.

2 ஆணையங்கள் விசாரணை

2 ஆணையங்கள் விசாரணை

இந்த 2 சம்பவங்களும் பெரும் பிரச்சனையாக மாறியது. ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகங்கள் கிளப்பப்பட்டன. இதையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தீவிர விசாரணை நடத்தி வந்தது. அதேபோல் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு தொடர்பான தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டது பற்றி விசாரணை நடத்தவும் ஓய்வு நீதிபதி அருணா ஜெகதீசன் தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டது.

அறிக்கைகள் தாக்கல்

அறிக்கைகள் தாக்கல்

இந்த 2 விசாரணை ஆணையங்களும் தீவிர விசாரணை நடத்தி வந்தன. விசாரணை முடிவடைந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கையை ஆறுமுகச்சாமியும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை அறிக்கை அருணா ஜெகதீசனும் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர். இந்த 2 அறிக்கைகளும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த 2 அறிக்கைகள் பற்றி பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அன்புமணி ராமதாஸ் பேட்டி

அன்புமணி ராமதாஸ் பேட்டி

அந்த வகையில் கோவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகச்சாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு அன்புமணி ராமதாஸ் பதிலளித்தார்.

 அரசியல் பண்ணலாம்

அரசியல் பண்ணலாம்

அப்போது,‛‛இந்த விஷயத்தில் நான் எனது தனிப்பட்ட கருத்தை சொல்கிறேன். ஆறுமுகச்சாமி ஆணைய அறிக்கை பார்த்தால் புரோபஷனலாக இல்லை. இதனை சட்டத்தின் முன்பு எடுத்து சென்றால் ஒன்றுமே ஆகாது. இதை வைத்து அரசியல் பண்ணலாம். அவ்வளவு தான். அதற்கு மேல் ஒன்றுமே இல்லை. ஏனென்றால் இன்னும் டெக்னிக்கல்லாக நிறைய விஷயங்கள் அதில் சொல்லப்படவில்லை. இதனை வைத்து அரசியல் செய்யலாம். சட்டமன்றத்தில் எடுப்படுமா? என்பது கேள்விக்குறிதான்'' என்றார்.

ஏற்றுக்கொள்ள வேண்டும்

ஏற்றுக்கொள்ள வேண்டும்

மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் தாக்கல் செய்த அறிக்கை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அன்புமணி ராமதாஸ், ‛‛அருணா ஜெகதீசன் அறிக்கையில் 17 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். கூடுதல் இழப்பீடு கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

காவல் துறைக்கு பாடமாக..

காவல் துறைக்கு பாடமாக..

அதேநேரத்தில் அறிக்கையை முழுமையாக பார்த்து என்னென்ன சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பார்க்க வேண்டும். மேலும் இந்த அறிக்கையை ஒரு பாடமாக வைத்து காவல்துறை கற்று கொள்ள வேண்டும். ஏனென்றால் யாரும் மனிதரை கண்மூடித்தனமாக தாக்க முடியாது. துப்பாக்கியால் சுடுவது என்பது உச்சக்கட்டமானது. சாதாரணமாக அடிக்கவே கூடாது. இதனால் காவல் துறை இதனை படிப்பினையாக எடுத்து கொண்டு வருங்காலத்தில் அதற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+