இலங்கை விமான படை தளபதி வீட்டில் கோத்தபாய ராஜபக்சே பதுங்கலா? விமான படை மறுப்பு
கொழும்பு: இலங்கை விமானப் படை தளபதி வீட்டில் கோத்தபாய ராஜபக்சே பதுங்கி உள்ளதாக வெளியான தகவல்களை இலங்கை கடற்படை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி மாளிகையைவிட்டு தப்பி ஓடிய கோத்தபாய ராஜபக்சே எங்கே பதுங்கி இருக்கிறார்? என்பது அதிகாரப்பூர்வமாக் அறிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில் கோத்தபாய ராஜபக்சே ராணுவத்திடம் தஞ்சமடைந்தார் எனவும் கூறப்படுகிறது.

சில ஊடகங்கள், விமான நிலையம் மூலம் கோத்தபாய ராஜபக்சே தப்பிச் செல்ல முயன்றார்; அவர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார் என்றும் இந்திய அரசு கோத்தபாயவை அனுமதிக்க மறுத்துவிட்டது என்றும் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன.
மேலும் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக கோத்தபாய கையெழுத்திட்டுவிட்டார் என்றும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இலங்கை போலீஸ் முன்னாள் அதிகாரி அஜித் தர்மபால, கோத்தபாயவின் தலைமறைவு இடம் தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், இலங்கை விமான படை தளபதி வீட்டில் கோத்தபாய பதுங்கி இருப்பதாக கூறியிருந்தார். இது இலங்கையில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இலங்கை விமான படை அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விமான படை தளபதி வீட்டில் கோத்தபாய ராஜபக்சே தஞ்சமடையவில்லை; அப்படி கோத்தபாய தங்கி இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய செய்திகள் இலங்கை விமானப் படைக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடியவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கோத்தபாய ராஜபக்சே, கடல்வழியாக இலங்கையை விட்டு தப்பிச் செல்வார்; அண்டை நாட்டுக்கு அவர் தப்பிச் சென்று அடைக்கலம் கோருவார் எனவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications