74-வது குடியரசு தினம்: நாட்டு மக்களுக்கு இன்று இரவு ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டின் 74- வது குடியரசு தினத்தையொட்டி இன்று நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.
நாட்டின் 74-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

இந்த உரை அகில இந்திய வானொலியின் அனைத்து தேசிய அலைவரிசைகளிலும் இரவு 7 மணிக்கு ஒலிபரப்பாகும். இதேபோல், தூர்தர்ஷனின் அனைத்து அலைவரிசைகளிலும் முதலில் இந்தியிலும், அதனைத்தொடர்ந்து ஆங்கிலத்திலும் ஒளிபரப்பாகும். இதைனைத் தொடர்ந்து தூர்தர்ஷனின் அனைத்து பிராந்திய அலைவரிசைகளிலும் அதன் பிராந்திய மொழிகளிலும் குடியரசுத்தலைவரின் உரை ஒளிபரப்பப்படுகிறது.
அகில இந்திய வானொலியில், பிராந்திய மொழிகளில் இரவு 9.30 மணி முதல் அதன் பிராந்திய அலைவரிசைகளில் ஒலிபரப்பாகும்.












Click it and Unblock the Notifications