Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி.. கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி நடத்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் டெல்லி ஆம்ஆத்மி அரசு மீது புதிய மதுபான கொள்கை தொடர்பான முறைகேடு புகார் எழுந்தது.

Aam Aadmi seeks to allow jailed Delhi CM Arvind Kejriwal to hold video-conferencing with cabinet ministers

இதையடுத்து புதிய மதுபான கொள்கை திரும்ப பெறப்பட்டது. இருப்பினும் முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் ஆம்ஆத்மியின் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

முதலில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, அடுத்ததாக சஞ்சய் சிங் எம்பி கைது செய்யப்பட்டனர். மேலும் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை கஸ்டடியில் எடுத்து அமலாக்கத்துறை தீவிரமாக விசாரணை நடத்தியது. தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கோரியும் கூட நீதிமன்றம் வழங்கவில்லை. கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்ததோடு, கெஜ்ரிவால் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களை அமலாக்கத்துறை வழங்கியதால் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் கொடுக்கவில்லை. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையிலேயே உள்ளார். இந்நிலையில் தான் சிறையில் இருந்தே ஆட்சி நடத்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை தாக்கல் செய்தவரின் பெயர் ஸ்ரீகாந்த் பிரசாத். இவர் தனது மனுவில், ‛‛டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பான செய்தியை வெளியிட கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். இதுதொடர்பாக தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

மேலும் சிறையில் இருந்தே அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை சிறைத்துறை டிஜிபி செய்து கொடுக்கஉத்தரவிட வேண்டும். ஏனெ்னறால் சிறையில் இருந்தே ஆட்சியை நடத்த பிரதமர் மற்றும் முதல்வருக்கு அரசியலமைப்பு சட்டம் எந்த தடையையும் வழங்கவில்லை. இதனால் சிறையில் இருந்தே ஆட்சியை நடத்த முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அனுமதி வழங்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+