சிபிஐ விசாரணை முடிந்து உற்சாகமாக சிரித்த முகத்தோடு வந்த விஜய்.. உடனே சென்னைக்கு ரிட்டர்ன்!
டெல்லி: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணையை முடித்துக் கொண்டு சிரித்த முகத்துடன் வெளியே வந்தார் விஜய். கருப்பு நிற உடையில் காாின் Sunroof வழியாக நின்று கொண்டு தொண்டா்கள், ரசிகா்களை பாா்த்து கையசைத்தார். தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில்,இன்றைய தினமே தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்ட விஜய், தற்போது சென்னை வந்தடைந்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்யிடம் இன்று நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவடைந்துள்ளது. நாளையும் விஜய்யிடம் விசாரணை நடைபெறும் என முன்பு தகவல்கள் வெளியான நிலையில், நாளை விசாரணை இல்லை எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து இன்றே சென்னை வந்தடைந்துள்ளார் விஜய்.

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் இன்று அறிவித்தார். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி என்று தேர்தல் நடைபெறும் என்றும் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் மார்ச் 30 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், இன்று (மார்ச் 15 ஆம் தேதி) தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம், டெல்லியில் சிபிஐ மூன்றாம் கட்ட விசாரணையை மேற்கொண்டது. சிபிஐ விசாரணைக்காக ஆஜராவதற்கு நேற்று (மார்ச் 14 ஆம் தேதி) சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டிருந்தார் விஜய். அவருடன் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்ட த.வெ.க. நிர்வாகிகள் 7 பேர் சென்றனர். டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கிய விஜய், இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை ஹோட்டலில் இருந்து புறப்பட்டு, சி.பி.ஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.
ஏற்கனவே 2 முறை நடத்தப்பட்ட விசாரணையின்போது கோரப்பட்ட ஆவணங்கள் இந்த விசாரணையின்போது, விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. விஜய்யிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகள் விஜய்யிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த 3 ஆம் கட்ட சிபிஐ விசாரணை நிறைவடைந்து உள்ளது. தேவைப்பட்டால் விசாரணை நாளை(திங்கட்கிழமை) மதியம் வரை நீடிக்கலாம் என்று தகவல்கள் வெளியான நிலையில், நாளை விஜய்யிடம் விசாரணை இல்லை என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிபிஐ விசாரணை நடைபெற்ற அலுவலகத்தின் முன்பு தவெக தொண்டர்கள் கூடியிருந்தனர். தவெக தொண்டர்கள் டிவிகே, டிவிகே என்று முழக்கம் எழுப்பினர். இந்நிலையில், இன்று சிபிஐ அலுவலகத்தில் 7 மணி நேரம் நடந்த விசாரணைக்குப் பிறகு, அங்கு வெளியில் கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்தபடி சென்றுள்ளார் விஜய். விஜய், சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போதே காாின் Sunroof வழியாக நின்று கொண்டு தொண்டா்கள், ரசிகா்களை பாா்த்து கையசைத்தார்.
இதையடுத்து இன்றைய தினமே தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்ட விஜய், தற்போது சென்னை வந்தடைந்துள்ளார். சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விஜய், சிபிஐ விசாரணை முடிந்து சென்னை வந்துள்ளார்.
-
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்! "அம்மா, அப்பா, மனைவி என்னிடம் கடன் வாங்கியுள்ளனர்" வேட்புமனுவில் தகவல் -
ரூ.500+ கோடிக்கு சொத்து இருக்கு.. ஆனாலும் ரூ.67,000க்கு TVS XL வாங்கிய விஜய்.. என்ன காரணம் தெரியுமா -
"நேர்காணல் கூட இல்லை.." விஜய் வேட்பாளர்களை அறிவிக்கும் போதே போராட்டத்தில் இறங்கிய தவெகவினர் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும்.. கொளத்தூரில் விஜய் பேச்சு -
இரவோடு இரவாக.. அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த நிர்வாகிகள்.. மூவருக்கும் சீட் கொடுத்த விஜய்! -
திருச்சி கிழக்கில் தேர்தல் அலுவலகம் கூட அமைக்காத தவெக.. 25 நாட்களில் விஜய்யால் மாற்றிவிட முடியுமா? -
Vijay: "எனக்காக விட்டு கொடுத்து இருக்காரு" கட்டி பிடித்து விஜய் சொன்ன அந்த வார்த்தை! யார் இந்த சிவா? -
புற்றுநோய்க்கு ஜோதிடம்தான் தீர்வு! அரிய கருத்தை சொன்னவருக்கு சீட் கொடுத்த விஜய்! சரியா போச்சு போங்க -
விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்.. ஜெயலலிதா ஸ்டைலில் பக்கா பிளான்.. செங்கோட்டையன் விளக்கம் -
ஜனநாயகன் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்.. ரஜினிக்கு பயந்து இந்த முடிவா? கடைசியில் இப்படி ஆகிடுச்சே!












Click it and Unblock the Notifications