திருமணமாகாத பெண்களுக்கும் கரு கலைப்பு செய்ய உரிமை உண்டு- உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: சட்டப்பூர்வமான மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்ய அனைத்து வகை பெண்களும் தகுதி உடையவர்கள் தான் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் (வயது 25) திருமணம் செய்துகொள்ளாமல் காதலனுடன் வசித்து வந்தார்.
இருவரும் ஒன்றாக வசித்து வந்த இந்த நிலையில் காதலனால் இளம்பெண் கர்ப்பமானார். ஆனால் கர்ப்பமான பிறகும் இளம்பெண்ணை காதலர் திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார்.

கருவை கலைக்க அனுமதிக்கும்படி
காதலன் கைவிட்டதாலும், திருமணத்துக்கு முன்பே கர்ப்பமானதாலும் அந்த பெண் கருவை கலைக்க முடிவு செய்தார். கர்ப்பம் ஆகி 23 வாரங்கள் ஆகிவிட்டதால் இளம்பெண் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தனது கருவை கலைக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார். மனுவில் அவர், எனக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் என்னால் இக்குழந்தையை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் இதனால் கருவை கலைக்க அனுமதிக்கும்படியும் கூறியிருந்தார்.

மேல்முறையீடு
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், கர்ப்பம் அடைந்து 20 வாரங்கள் ஆகிவிட்டதால், இளம்பெண் கருவை கலைக்கக்கூடாது என்றும் குழைந்தையை பெற்று அந்த குழந்தையை அரசிடம் ஒப்படைக்கலாம் எனவும் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த பெண்ணின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்றது.

ஆய்வுக்கு உட்பட்டு கருவை கலைக்க
இந்த மேல் முறையீட்டு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து இருந்தது. அதில், கருக்கலைப்பு சட்டத்தில் 2021- ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் படி, 3-வது பிரிவில் கணவன் என்பதற்கு பதில் பார்ட்னர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால் திருமணம் ஆகாத பெண்களுக்கு இந்த சட்டம் பொருந்தும் என்பதே ஆகும். எனவே, மனுதாரருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆய்வுக்கு உட்பட்டு கருவை கலைக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டு இருந்தது.

அனைத்து பெண்களும் தகுதி
இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் விரிவான ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில், ''தேவையற்ற கருவை கலைக்கும் ஒரு பெண்ணின் உரிமையை திருமண நிலையை முன்வைத்து பறிக்க முடியாது. மருத்துவ கருக்கலைப்பு சட்டம் மற்றும் விதிகளின் படி 24 வாரங்கள் வரையிலான கருவை கலைக்கும் உரிமை திருமணம் ஆகாத பெண்களுக்கும் உண்டு. சட்டப்பூர்வமாக மற்றும் பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதி உடையவர்கள் தான்'' என்று கூறப்பட்டுள்ளது.
-
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications