சிபிஎஸ்இ பிளஸ் 2 ரிசல்ட்..92.72% பேர் தேர்ச்சி..https://cbseresults.nic.in/ இணையதளத்தில் பார்க்கலாம்
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ளது.
டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. cbseresults.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம். தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக, 2020-21 கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வை இரண்டு அமர்வுகளாக சிபிஎஸ்இ நடத்தியது. முதல் அமர்வில் 50% பாடத்திட்டங்களில் இருந்து கொள்குறிவகை வினா விடை (MCQ) மூலம் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர். அதற்கான தேர்வு முடிவுகள் முன்னரே அறிவிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இரண்டாவது அமர்வு எழுத்துத் தேர்வாக நடைபெற்றது. இதில், புறநிலை வகை வினாக்களும், அகநிலை வினாக்களும் இடம் பெற்றிருந்தன.

சிபிஎஸ்இ பிளஸ் 2 ரிசல்ட்
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக காலதாமதம் ஆன நிலையில் இன்று வெளியாகியுள்ளன.14,35,366 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 13,30,662 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 92.71 சதமாகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 7% குறைவாகும்.

திருவனந்தபுரம் டாப் 1
98.83% தேர்ச்சி விகிதத்துடன் திருவனந்தபுரம் பிராந்தியம் முதல் இடத்தையும், 98.16% விகிதத்துடன் பெங்களூரு இரண்டாம் இடத்தையும், 97.79 தேர்ச்சி விகிதத்துடன் சென்னை மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

ரிசல்ட் பார்ப்பது எப்படி?
சிபிஎஸ்இ வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக சிரமமின்றி தேர்வு முடிவுகளை காணலாம். இதற்கான இணையதளம் cbse.nic.in , cbseresults.nic.in ஆகும். கூடுதலாக, பள்ளி மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

92.71% மாணவ மாணவிகள் தேர்ச்சி
நாடு முழுவதும் 92.71% மாணவ மாணவிகள் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 7 சதவிகிதம் குறைந்துள்ளது. 98.86% தேர்ச்சி பெற்று திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. 98.16% தேர்ச்சி பெற்று பெங்களூரு மண்டலம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் சென்னை மண்டலத்தில் 97.79% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் சென்னை மண்டலம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

பொறியியல் படிக்க ஜூலை 27 வரை அவகாசம்
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் காலதாமதமாக வெளியாகியுள்ளதால் பொறியியல் படிப்புகளில் சேர கால அவகாசம் அளிக்கப்பப்பட்டுள்ளது. வரும் 27ஆம் தேதி வரைக்கும் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகலில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications