Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: உடனடி உதவிக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த விமானப் படை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணிகளில் உடனடியாக உதவிய முதல்வர் ஸ்டாலின், உள்ளூர் போலீஸார், நீலகிரி மாவட்ட ஆட்சியர், உள்ளூர் மக்களுக்கு இந்திய விமான படை நன்றி தெரிவித்து ட்வீட் அனுப்பியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 8 ஆம் தேதி சூலகிரியிலிருந்து வெலிங்டன் சென்ற இந்திய விமான படையின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதையறிந்த உள்ளூர் மலை கிராம மக்கள் உடனடியாக தீப்பிடித்து எரிந்த விமானத்தை அணைக்க முயற்சித்தனர்.

சிறிய பாத்திரங்களில் தண்ணீர் கொண்டு வந்து அணைத்துள்ளனர். பின்னர் உள்ளூர் போலீஸாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக மீட்பு பணிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் முடுக்கிவிட்டார்.

பிபின் ராவத்

பிபின் ராவத்

இந்த விமானத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்திருந்ததால் அவரின் நிலை குறித்து தெரியாமல் மீட்பு படையினர் தொய்வடைந்தனர். இதையடுத்து சென்னையில் இருந்த முதல்வர் ஸ்டாலின் விமான விபத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை, காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

6 மருத்துவர்கள்

6 மருத்துவர்கள்

இதையடுத்து காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க 6 மருத்துவர்கள் கொண்ட குழு அங்கு சென்றனர். இதையடுத்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா, ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு அவர் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Recommended Video

    Who is Bipin Rawat| வாழ்க்கை குறிப்பு
    இந்திய விமான படை

    இந்திய விமான படை

    இந்த நிலையில் இந்த 13 பேரின் உடல்களை மீட்பது, கருப்பு பெட்டியை கண்டறிவது, விபத்து நடந்த இடத்தில் ஆய்வு நடத்தியது, வெலிங்டன்னில் இருந்து சூலகிரிக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட விவகாரங்கள் தமிழக அரசும் உள்ளூர் கிராம மக்களும் ராணுவத்தினருக்கு உதவியிருந்தனர். இதற்கு இந்திய விமான படை நன்றி தெரிவித்துள்ளது.

    முதல்வர் ஸ்டாலின்

    முதல்வர் ஸ்டாலின்

    இதுகுறித்து இந்திய விமான படை அனுப்பிய ட்வீட்டில் ஹெலிகாப்டர் விமான விபத்தின் போது மீட்பு பணிகளுக்கும் மருத்துவ உதவிகளுக்கும் உடனடியாக உதவிய முதல்வர் ஸ்டாலின், நீலகிரி ஆட்சியர் அம்ரித், காட்டேரி கிராம மக்கள், உள்ளூர் போலீஸார் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+