தவறானவர்கள் கையில் கிரிப்டோகரன்சி செல்வதை தடுக்க வேண்டும்- உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு
டெல்லி : கிரிப்டோகரன்சி விவகாரத்தில் அனைத்து ஜனநாயக நாடுகளும் இணைந்து செயல்படுவது முக்கியம் என்றும், இளைஞர்களை பாதிக்கும் என்பதால் தவறானவர்கள் கையில் கிரிப்டோகரன்சி செல்வதை தடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

காணொலி மூலம் சிட்னி மாநாடு
காணொலிக் காட்சி மூலம் சிட்னி மாநாட்டில் 'இந்திய தொழில்நுட்பம்: பரிணாமம் மற்றும் புரட்சி என்ற தலைப்பில் பேசிய மோடி, டிஜிட்டல் கரன்சியில் மில்லியன் கணக்கான இந்தியர்கள் செய்த முதலீட்டை கண்காணிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

டிஜிட்டல் உலகில் புதிய மாற்றம்
டிஜிட்டல் உலகம், நம்மை சுற்றியுள்ள அனைத்தையும் மாற்றிவிட்டது. அரசியல், பொருளாதாரம், சமூகம் போன்றவற்றிற்கு புதிய வரையறையை தந்துள்ளது. நிர்வாகம், சட்டம், நெறிமுறைகள், உரிமை, இறையாண்மை, பாதுகாப்பு போன்ற விஷயங்களில் கேள்விகளை டிஜிட்டல் உலகம் எழுப்புகிறது. சர்வதேச போட்டி, அதிகாரம் மற்றும் தலைமை ஆகியவற்றில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது டிஜிட்டல் உலகம்.

ஒருங்கிணைப்புத் தேவை
ஆனாலும் டிஜிட்டல்மயமாக்கத்தால் சைபர்துறை முதல் விண்வெளி வரை புதிய அச்சுறுத்தல்கள், மோதல்கள் ஆகியவற்றை எதிர்கொள்கிறோம். உலகளாவிய போட்டிக்கு, தொழில்நுட்பம் முக்கிய கருவியாக விளங்குகின்றது. கிரிப்டோகரன்சி அல்லது பிட்காயின் விவகாரத்தில் அனைத்து ஜனநாயக நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும். இளைஞர்களை பாதிக்கும் என்பதால் கிரிப்டோ கரன்ஸி தவறானவர்கள் கையில் சென்றுவிடாமல் தடுப்பதை அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டும்.

6 லட்சம் கிராமங்களில் பிராட்பேன்ட்
தொழில்நுட்ப வளர்ச்சி.இந்தியாவில் ஜனநாயகம், மக்கள்தொகை மற்றும் பொருளாதாரத்தின் அளவு ஆகியவற்றோடு பிண்ணிப் பினைந்துள்ளது. அதற்குக் காரணம் இளைஞர்கள் மட்டுமே. 1.3 பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் தனித்துவமான டிஜிட்டல் முறையை இந்தியாவில் கையாளுகின்றனர். இந்தியாவில் ஆறு லட்சம் கிராமங்கள் பிராட்பேண்ட் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

சேவை
தொழில் மற்றும் சேவை, விவசாயம் கூட டிஜிட்டல் உலகிற்கு மாற்றப்பட்டுள்ளது. பணப்பரிவர்த்தனை உள்பட அனைத்து முக்கியமான விவகாரங்களுக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்து வருகிறது. வெளிப்படைத்தன்மையே ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம். இதனை, சமூக விரோத சக்திகள் தவறாக பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications