Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாபர் மசூதியையே இடித்தவர்களுக்கு இஸ்லாமியர்களின் வீடுகளை இடிப்பதா கடினம்?.. சீமான் பரபர கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு கட்டங்களை அகற்றும் விவகாரத்தில் பாபர் மசூதியை குறிப்பிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் பாஜகவை வீழ்த்தும் காலம் வெகுதொலைவில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரி பகுதியில் கடந்த சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தின் போது இருதரப்பு மக்கள் இடையே மோதல் உருவானது. இது வன்முறையாக மாறியது. வாகனங்கள் சூறையாடப்பட்டன.

இந்நிலையில் தான் வன்முறை நடந்த ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற டெல்லி வடக்கு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. நேற்று காலையில் ஆக்கிமிப்பு அகற்றும் பணி நேற்று துவங்கியது. உச்சநீதிமன்ற உத்தரைவை தொடர்ந்து இந்த பணி நிறுத்தப்பட்டது. மேலும் உத்தரவு நகல் கிடைக்கும் வரை கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்றது.

சீமான் கண்டனம்

சீமான் கண்டனம்

டெல்லி வடக்கு மாநகராட்சியில் பாஜக அதிகாரத்தில் உள்ளது. இதனால் தான் நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை என காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி உள்பட பல்வேறு எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளா். அதில் பாஜகவை அவர் ஆக்ரோஷமாக விமர்சித்துள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

புதை குழியில் தள்ளும் கொடுஞ்செயல்

புதை குழியில் தள்ளும் கொடுஞ்செயல்

டெல்லியில் அனுமன் ஜெயந்தி நிகழ்வின்போது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளையும், கலவரத்தையும் காரணமாக காட்டி அங்கு வாழும் இஸ்லாமிய மக்களைக் குறிவைத்துத் தாக்குவதும், அவர்கள் மீது கொடுஞ்சட்டங்களைப் பாய்ச்சுவதும், அவர்களது வீடுகளை இடித்துத் தகர்ப்பதுமான மத்தியில் ஆளும் பாஜக அரசின் கொடுங்கோல் செயல்பாடுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. ஏற்கனவே, மத்தியப்பிரதேசத்தில் ராம நவமி ஊர்வலத்தின்போது நடந்த வன்முறைகளைக் காரணமாகக் காட்டி அம்மாநில பாஜக அரசு இசுலாமிய மக்களின் வீடுகளையும், குடியிருப்புகளையும், கடைகளையும் இடித்துத் தகர்த்த நிலையில் அதனை அடியொற்றுவது போல டெல்லி, ஜஹாங்கிர்புர் நகரிலும் நடைபெற்று வரும் மக்கள் விரோத எதேச்சதிகாரப்போக்குகள் இந்நாட்டின் ஜனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளும் கொடுஞ்செயல்களாகும்.

 வெட்கக்கேடானவை

வெட்கக்கேடானவை

மத்தியப்பிரதேசத்தை ஆளும் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு, எவ்வித விதிமுறைகளையும் கடைபிடிக்காது மதவெறிக்கண்ணோட்டத்தோடு, அம்மாநிலத்திலுள்ள இஸ்லாமியர்களின் குடியிருப்புகளையும், கடைகளையும், வீடுகளையும் தகர்த்த நிலையில், அதேபோன்ற நடவடிக்கைகள் டெல்லியிலும் தொடருவது நாடெங்கிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரதம மந்திரி வீட்டு வசதித்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளையும், விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதெனக்கூறி, மத்தியப்பிரதேசத்தில் இடித்துத்தள்ளியிருப்பதும், உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி, டெல்லியில் வீடுகளைத் தகர்த்து முடிப்பதுமான பாஜக ஆட்சியாளர்களின் நிர்வாகச்செயல்முறைகள் வெட்கக்கேடானவையாகும்.

ஜனநாயக படுகொலை

ஜனநாயக படுகொலை

மதச்சார்பற்ற ஜனநாயக நாடெனப் போற்றப்பட்ட இந்நாட்டில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் துணையோடு நிகழ்த்தப்படும் மதவெறியாட்டங்களும், இஸ்லாமியர்கள் மீதான கோரத்தாக்குதல்களும், அரசின் பாரபட்சமான மதவாத நடவடிக்கைகளும் கடும் கண்டனத்திற்குரியதாகும். பாஜக அரசு பதவியேற்றது முதலே இஸ்லாமிய மக்கள் மீது நாள்தோறும் தாக்குதல்களும், நெருக்கடிகளும் நிகழ்த்தப்படுவதும், அவர்களுக்கான மதவுரிமைகளும், ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்படுவதுமான நிகழ்வுகள் வெளிப்படையாக நிகழ்ந்தேறும் ஜனநாயகப்படுகொலையாகும்.

பாபர் மசூதியை...

பாபர் மசூதியை...

சொந்த நாட்டு மக்களை மதத்தின் பெயரால் துண்டாடி, நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைத்துவிட்டு, குடிகளைக் கொடிய ஆட்சி முறையால் சாகடித்துவிட்டு பிணங்களின் மீது நாற்காலியிட்டு அமர்ந்திருக்கும் பாஜகவின் ஆட்சியதிகாரமும், அதன் தத்துவக்கோட்பாடும், அரசியல் நிலைப்பாடும் மானுடகுலத்திற்கே எதிரானப் பேராபத்தாகும். உச்ச நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, உலகத்தின் கண்முன்னால் பாபர் மசூதியையே இடித்துத் தகர்த்தவர்களுக்கு இஸ்லாமிய மக்களின் வீடுகளை இடிப்பதா கடினம்?. கட்சியும், அதிகாரமும் கைவசமிருக்கும் துணிவிலும், பதவிபோதை தரும் மமதையிலும் நாட்டு மக்களை நாளும் வாட்டிவதைத்து பேயாட்டம் போடும் பாஜகவின் செயல்பாடுகளுக்கு முடிவுகட்டப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.

வீழ்த்தும் காலம்

வீழ்த்தும் காலம்

'ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பானதாகும்' எனும் நபிகள் பெருமகனாரின் கூற்றுக்கிணங்க, மக்களின் கண்ணீரும், துயரமும், அதனால் எழுந்திடும் கோபமும், பேரெழுச்சியும் பாஜக அரசு செய்திடும் அநீதியை மொத்தமாய் வீழ்த்தும் காலத்தை விரைவில் உருவாக்குவோமெனவும், ஜனநாயகப்போர் புரிந்து, நாட்டையாளும் பாஜக அரசின் கோர முகத்தை முழுவதுமாக தோலுரிப்போம் எனவும் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+