இப்படி மட்டும் நடந்தால்.. புதிய சாதனை படைப்பாரா அரவிந்த் கெஜ்ரிவால்.. புது டெல்லியில் முன்னிலை!
Recommended Video
டெல்லி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். இவர் டெல்லியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஆரம்பத்திலேயே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அங்கு ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது.

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 44 இடங்களில் முன்னிலை, பாஜக 16 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் ஆம் ஆத்மி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
அங்கு மொத்தம் 70 தொகுதிகள் உள்ளது. அங்கு பெரும்பான்மை பெற 36 இடங்களில் வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். இவர் டெல்லியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் இதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
பாஜகவின் சுனில் யாதவ் இங்கு மிக மோசமான பின்னடைவை சந்தித்து இருக்கிறார். இங்கு பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றிபெற்று சாதிக்க வாய்ப்புள்ளது என்று கணிக்கப்படுகிறது. இவர் எம்எல்ஏக்களில் அதிக வாக்குகளை பெற்று வெற்றிபெற்றவர் என்ற சாதனையை படைப்பாரா என்று ஆம் ஆத்மி கட்சியினர் எதிர்பார்க்க தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications