சூடு பிடிக்கிறது காங். தலைவர் பதவி தேர்தல்- அசோக் கெலாட், சசி தரூரை தொடர்ந்து திக்விஜய்சிங் போட்டி?
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தலில் அசோக் கெலாட், சசி தரூரைத் தொடர்ந்து மூத்த தலைவர் திக்விஜய்சிங்கும் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது. செப்டம்பர் 30-ந் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். அக்டோபர் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு அக்டோபர் 19-ல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இத்தேர்தலில் சோனியா குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடப் போவது இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சோனியா குடும்பத்தினரது விருப்பமாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிருப்தியாளர்கள் சார்பாக சசி தரூர் களம் காண்கிறார்.
இந்நிலையில் டெல்லியில் சோனியா காந்தியை அசோக் கெலாட் இன்று சந்தித்தார். இன்னொரு பக்கம், காங்கிரஸ் கட்சி தலைமை செயலகம் சென்ற சசி தரூர், வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு நடத்தினார். அசோக் கெலாட், சசி தரூர் இடையே மட்டுமே போட்டி என்றிருந்த நிலையில் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங்கும் களத்தில் குதித்துள்ளார். என்னை மட்டும் ஏன் போட்டியில் இருந்து விலக்கி வைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பி பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளார் திக்விஜய்சிங். இதனால் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவக் கூடும்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த திக்விஜய்சிங், செப்டம்பர் 30-ந் தேதி மாலைதான் யார் யார் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்? என்பது தெரியவரும். இந்த தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு காங்கிரஸ் தலைவருக்கும் உரிமை உண்டு. இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் 2000-ம் ஆண்டுக்குப் பின்னர் இம்முறைதான் வாக்கெடுப்பு மூலம் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட மாநில நிர்வாகிகள் 10 பேர் வேட்புமனுவில் கையெழுத்திட வேண்டும். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சுமார் 9,000 பேர் வாக்களிக்க உள்ளனர்.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டால் அவர் ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. ஆனால் அசோக் கெலாட்டோ தாம் இரு பதவிகளையும் வகிப்பேன் என அடம் பிடித்துவருகிறார். இதனால் ஒருவருக்கு எத்தனை பதவி என்கிற விவாதமும் காங்கிரஸில் களை கட்டியிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications