தேர்தல் வாக்குறுதிகளில்.. இலவசங்களை அறிவிக்க தடை கோரும் மனு! உடனே விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு!
டெல்லி: தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை அறிவிக்க தடை கோரும் மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் நெருங்குவதால் வழக்கை விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கிறது.
முன்னதாக கடந்த 19ம் தேதி தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நடத்திய விசாரணையில், பணக்காரன் - ஏழை என்ற பாகுபாடுகூட இல்லாமல், கண்மூடித்தனமாக இலவசங்களை வாரி வழங்கும் மாநில அரசுகளை உச்ச நீதிமன்றம் கண்டித்திருந்தது. தேர்தலைக் குறிவைத்து, பொது நிதியைப் பற்றி கவலைப்படாமல் அரசியல் நடத்துகிறீர்களா என கேள்வி எழுப்பியிருந்தது.

வருமானம் அதிகமாக இருக்கும் மாநிலமாக இருந்தாலும், விவேகமற்ற இலவசங்களை அளிப்பதை விட, நலத்திட்டங்களுக்கும் வளர்ச்சிக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. அதேபோல வருவாய் பற்றாக்குறையில் இயங்கும் மாநிலங்கள்கூட, இலவசங்களுக்கு நிதியைத் தாராளமாக செலவழிக்கின்றன என்று தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்திருந்தது. அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக இலவசங்களை அறிவிக்கவும், பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பதற்கு தடைகோரியும் மனு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கு தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், "நேற்று கேரளா மாநிலத்தில் தேர்தல் வருகிறது, அதனால் இது போன்ற ஒரு மனுவை தொடர்ந்தார்கள். தற்போது தமிழ்நாடு தேர்தல் வருகிறது. எனவே இந்த மனுவை நீங்கள் தாக்கல் செய்கிறீர்கள். இதை தற்போது ஏற்க முடியாது. தேர்தல் முடிந்த பின்பாக வழக்கை எடுத்து விசாரிக்கலாம். தற்போது அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.
-
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications