டெல்லி சட்டசபை தேர்தல்.. மாரடைப்பால் தேர்தல் அதிகாரி மரணம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video
Delhi Legislative Assembly election 2020 - டெல்லி தேர்தல்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மரணமடைந்தார்.
70 சட்டசபை தொகுதிகளை கொண்ட டெல்லிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தலைநகர் டெல்லியை பிடிக்க பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன.

தேர்தலையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப் பதிவில் வடகிழக்கு டெல்லியில் பாபர்பூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக உத்தம் சிங் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இதனால் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது.












Click it and Unblock the Notifications