மத்திய பாஜக ஆட்சியில் ரூ2,000 கள்ள நோட்டு 54%; ரூ500 கள்ள நோட்டு 102% அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி ஷாக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் ரூ2,000 கள்ள நோட்டு 54%; கள்ள நோட்டு 102% அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2016-ம் ஆண்டு பிரதமர் மோடி நள்ளிரவில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பு ஒட்டுமொத்தமாக இந்தியாவையே நிலைகுலைய வைத்தது. ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்பதுதான் அறிவிப்பு.

Fake notes spike in India: RBI Report

ரூ500, ரூ1,000 நோட்டுகளை மாற்றுவதற்கு பொதுமக்கள் பட்டபாடு சொல்லி மாளாதது. பணத்தை மாற்றுவதற்காக வங்கி வாசல்களில் காத்திருந்து மாண்டவர்கள் எத்த்னையோ பேர்... அன்று வங்கிகள், ஏடிஎம்களில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் இன்னமும் பொதுமக்களுக்கு கழுத்தைப் பிடிப்பவையாகவே இருக்கின்றன.

மத்திய அரசின் இந்த ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையானது தோல்வி அடைந்துவிட்டது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. தற்போதும் கூட மத்திய அரசு அறிமுகம் செய்த ரூ2,000 நோட்டுகள் புழக்கத்தில் குறைந்துவிட்டன. மத்திய அரசே இதை கட்டுப்படுத்திவிட்டது. தற்போது ரூ500, ரூ200 நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கின்றன.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் நாட்டில் கடந்த நிதி ஆண்டில் ரு500 கள்ள நோட்டு புழக்கம் 102% அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் ரூ2,000 கள்ள நோட்டு புழக்கம் 54% அதிகரித்திருக்கிறது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிக்கை மத்திய அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரெக் ஓ பிரைன் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+