ரபேல் போர் விமானத்தை இயக்க இருக்கும் முதல் பெண் விமானி... 10ல் ஒருவர் தேர்வு!!
டெல்லி: இந்திய விமானப்படையில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட ரபேல் போர் விமானத்தை இயக்குவதற்கு முதன் முறையாக பெண் விமானி ஒருவர் அமர்த்தப்பட இருக்கிறார். இந்திய விமானப்படையில் பணியாற்றி வரும் பத்து பெண் விமான ஓட்டிகளில் ஒருவர் அமர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய விமானப் படையின் கோல்டன் ஏரோஸ் படைப்பிரிவில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி ரபேல் போர் விமானங்கள் சேர்க்கப்பட்டன. இதையடுத்து இந்த விமானம் லடாக் மற்றும் லே பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளை முன்னிட்டு பறந்து உளவு பார்த்து வருகின்றன.

தற்போது இந்திய விமானப் படையில் ஐந்து ரபேல் போர் விமானங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. மொத்தம் 36 போர் விமானங்கள் வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இன்னும் மீதமுள்ள ரபேல் விமானங்கள் வரும் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்தியா வந்து சேரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டுக்குள் அனைத்து விமானங்களும் படையில் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மிக் 21 போர் விமானங்களை ஓட்டுவதற்கு இந்திய விமானப் படையில் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு போர் விமானத்தில் இருந்து மற்றொரு போர் விமானத்துக்கு மாறும்போது அவர்களுக்கு பயிற்சி தேவைப்படுகிறது. அந்த வகையில், தற்போது இந்தியாவில் போர் விமானம் இயக்குவதற்கு பயிற்சி பெற்று இருக்கும் பத்து பேரில் ஒருவர் ரபேல் போர் விமானம் ஓட்டுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த பத்து பெண் விமான ஓட்டிகளுக்கும் சு-30 எம்கேஐ மற்றும் மிக 29 யுபிஜி ஆகிய போர் விமானங்களை இயக்கத் தெரியும். பெண்கள் போர் விமானம் ஓட்டுவதற்கு கடந்த 2016ல் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ராஜதந்திர ரீதியாகவும், செயல்பாட்டு ரீதியாகவும் அவ்வப்போது பெண்கள் விமான ஓட்டிகளாக விமானப் படையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர் என்று மத்திய அரசு கடந்த வாரம் லோக் சபாவில் தெரிவித்து இருந்தது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications