ரபேல் போர் விமானத்தை இயக்க இருக்கும் முதல் பெண் விமானி... 10ல் ஒருவர் தேர்வு!!
டெல்லி: இந்திய விமானப்படையில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட ரபேல் போர் விமானத்தை இயக்குவதற்கு முதன் முறையாக பெண் விமானி ஒருவர் அமர்த்தப்பட இருக்கிறார். இந்திய விமானப்படையில் பணியாற்றி வரும் பத்து பெண் விமான ஓட்டிகளில் ஒருவர் அமர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய விமானப் படையின் கோல்டன் ஏரோஸ் படைப்பிரிவில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி ரபேல் போர் விமானங்கள் சேர்க்கப்பட்டன. இதையடுத்து இந்த விமானம் லடாக் மற்றும் லே பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளை முன்னிட்டு பறந்து உளவு பார்த்து வருகின்றன.

தற்போது இந்திய விமானப் படையில் ஐந்து ரபேல் போர் விமானங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. மொத்தம் 36 போர் விமானங்கள் வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இன்னும் மீதமுள்ள ரபேல் விமானங்கள் வரும் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்தியா வந்து சேரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டுக்குள் அனைத்து விமானங்களும் படையில் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மிக் 21 போர் விமானங்களை ஓட்டுவதற்கு இந்திய விமானப் படையில் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு போர் விமானத்தில் இருந்து மற்றொரு போர் விமானத்துக்கு மாறும்போது அவர்களுக்கு பயிற்சி தேவைப்படுகிறது. அந்த வகையில், தற்போது இந்தியாவில் போர் விமானம் இயக்குவதற்கு பயிற்சி பெற்று இருக்கும் பத்து பேரில் ஒருவர் ரபேல் போர் விமானம் ஓட்டுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த பத்து பெண் விமான ஓட்டிகளுக்கும் சு-30 எம்கேஐ மற்றும் மிக 29 யுபிஜி ஆகிய போர் விமானங்களை இயக்கத் தெரியும். பெண்கள் போர் விமானம் ஓட்டுவதற்கு கடந்த 2016ல் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ராஜதந்திர ரீதியாகவும், செயல்பாட்டு ரீதியாகவும் அவ்வப்போது பெண்கள் விமான ஓட்டிகளாக விமானப் படையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர் என்று மத்திய அரசு கடந்த வாரம் லோக் சபாவில் தெரிவித்து இருந்தது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications