காந்தி பொம்மையை சுட்டு கைதாகி ஜாமீனில் வெளி வந்த பெண் சாமியாருக்கு தடபுடல் வரவேற்பு
இந்து மகா சபை பூஜா சகுண் பாண்டேவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அலிகார்: ஜாமீனில் வெளியே வந்தும் இன்னும் அதே அமர்க்கத்தோடுதான் இருக்கிறார்கள் இந்து மகா சபையினர். மகாத்மா காந்தியின் உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்டு கைதாகி,ஜாமீனில் வந்துள்ள பூஜா பாண்டே உள்ளிட்டவர்களுக்கு தடபுடல் பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 30- ந் தேதி நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. ஆனால் அலிகாரில் உள்ள இந்து மகா சபாயினர் காந்தியின் உருவப்படத்தை அவமதித்தனர்.
அவர்கள் அலுவலகத்திலேயே காந்தியின் உருவப்படத்தை வைத்து அதை இந்து மகா சபா நிர்வாகி பூஜா பாண்டே துப்பாக்கியால் சுடுவது போல போஸ் கொடுத்தார்.

துப்பாக்கியால் சுட்டார்
பிறகு காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு மரியாதை செலுத்தி, இனிப்புகளும் வழங்கப்பட்டது. இறதியாக காந்தியின் உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றியும் எரித்தனர். இதை வீடியோவாக எடுத்து அந்த அமைப்பினர் பதிவிட நாடு முழுவதும் இந்த சம்பவம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

பாராட்டு விழா
இதையடுத்து, பூஜா பாண்டே உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை போலீசார் கைது செய்தனர். ஆனால் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி அனைவருமே ஜாமீனில் வந்துவிட்டனர். இப்படி ஜாமீனில் வெளிவந்துள்ளதால், பூஜா பாண்டே உள்ளிட்ட 14 பேருக்கும் இந்து மகா சபா சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.

வீர வாள்
இந்த சபாவின் அகில இந்தியத் தலைவர் சந்திர பிரகாஷ் கௌசிக் என்பவர் பகவத் கீதையுடன் பெரிய வாள் ஒன்றை பூஜா பாண்டேவுக்கு வழங்கி கவுரப்படுத்தி உள்ளார். அது மட்டும் இல்லை. இந்த கூட்டத்தில் சந்திரபிரகாஷ் கௌசிக் பேசும்போது, "நாங்கள் போலீசுக்கு பயப்பட போறது கிடையாது. பூஜா பாண்டே செய்ததில் ஒரு தப்பும் இல்லை. எங்களுக்கு உதவிக்கரமாக இருந்த வக்கீல்களுக்கு நன்றி" என்றார்.

ஒரு தவறும் இல்லை
இப்படி நடந்த நிகழ்வை அலிகார் போலீஸ் வீடியோவாக எடுத்து இருக்கிறது. மேலும் இந்த நிகழ்வில் ஏந்த ஆட்பேசத்துக்குரிய விஷயமும் இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications