காந்தி பொம்மையை சுட்டு கைதாகி ஜாமீனில் வெளி வந்த பெண் சாமியாருக்கு தடபுடல் வரவேற்பு
இந்து மகா சபை பூஜா சகுண் பாண்டேவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அலிகார்: ஜாமீனில் வெளியே வந்தும் இன்னும் அதே அமர்க்கத்தோடுதான் இருக்கிறார்கள் இந்து மகா சபையினர். மகாத்மா காந்தியின் உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்டு கைதாகி,ஜாமீனில் வந்துள்ள பூஜா பாண்டே உள்ளிட்டவர்களுக்கு தடபுடல் பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 30- ந் தேதி நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. ஆனால் அலிகாரில் உள்ள இந்து மகா சபாயினர் காந்தியின் உருவப்படத்தை அவமதித்தனர்.
அவர்கள் அலுவலகத்திலேயே காந்தியின் உருவப்படத்தை வைத்து அதை இந்து மகா சபா நிர்வாகி பூஜா பாண்டே துப்பாக்கியால் சுடுவது போல போஸ் கொடுத்தார்.

துப்பாக்கியால் சுட்டார்
பிறகு காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு மரியாதை செலுத்தி, இனிப்புகளும் வழங்கப்பட்டது. இறதியாக காந்தியின் உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றியும் எரித்தனர். இதை வீடியோவாக எடுத்து அந்த அமைப்பினர் பதிவிட நாடு முழுவதும் இந்த சம்பவம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

பாராட்டு விழா
இதையடுத்து, பூஜா பாண்டே உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை போலீசார் கைது செய்தனர். ஆனால் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி அனைவருமே ஜாமீனில் வந்துவிட்டனர். இப்படி ஜாமீனில் வெளிவந்துள்ளதால், பூஜா பாண்டே உள்ளிட்ட 14 பேருக்கும் இந்து மகா சபா சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.

வீர வாள்
இந்த சபாவின் அகில இந்தியத் தலைவர் சந்திர பிரகாஷ் கௌசிக் என்பவர் பகவத் கீதையுடன் பெரிய வாள் ஒன்றை பூஜா பாண்டேவுக்கு வழங்கி கவுரப்படுத்தி உள்ளார். அது மட்டும் இல்லை. இந்த கூட்டத்தில் சந்திரபிரகாஷ் கௌசிக் பேசும்போது, "நாங்கள் போலீசுக்கு பயப்பட போறது கிடையாது. பூஜா பாண்டே செய்ததில் ஒரு தப்பும் இல்லை. எங்களுக்கு உதவிக்கரமாக இருந்த வக்கீல்களுக்கு நன்றி" என்றார்.

ஒரு தவறும் இல்லை
இப்படி நடந்த நிகழ்வை அலிகார் போலீஸ் வீடியோவாக எடுத்து இருக்கிறது. மேலும் இந்த நிகழ்வில் ஏந்த ஆட்பேசத்துக்குரிய விஷயமும் இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications