யாரையும் சஸ்பெண்ட் செய்யல.. டெல்லி கமிஷ்னருக்கு பணி நீட்டிப்பு.. ஏன் இப்படி.. ப சிதம்பரம்
டெல்லி: டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் அருகே குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடிய மக்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நேற்று போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி கோபால் என்ற நபர் நேற்று திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒரு மாணவருக்கு காயம் ஏற்பட்டது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நிகழ்த்துவதற்காக துப்பாக்கியுடன் கோபால் ஆவேசத்துடன் ஓடி வந்த போது அங்கு பாதுகாப்புக்கு நின்று இருந்த ஏராளமான டெல்லி போலீசார் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். மாணவர்கள் உதவிக்கு அழைத்தும் துப்பாக்கியை காட்டி மிரட்டிக்கொண்டிருந்த கோபாலை போலீசார் தடுக்க முயற்சி செய்யவில்லை. துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்தே அந்தநபரை போலீசார் பிடித்துச் சென்றனர்.

துப்பாக்கி சூடு சம்பவமும், போலீசார் நடந்து கொண்ட விதமும் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட் பதிவில், "டெல்லியில் போலீசார் குவிக்கப்பட்ட இடத்திலேயே துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. அன்றைய நாளிலேயே டெல்லி போலீஸ் கமிஷ்னருக்கு பதவி நீட்டிப்பு கிடைத்துள்ளது. புரிந்து கொள்ள முடியாது. கண்டிக்கத்தக்கது. ஒரு பக்கம் நீட்டிப்பு கிடைத்துள்ளது. மறுபக்கம் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்காக யாரும் பணியிடை நீக்கம் செய்யப்படாதது ஏன்" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications