ரூ50 லட்சம் லஞ்சம்... 250 சீனர்களுக்கு சட்டவிரோத விசா - கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புது வழக்கு!
டெல்லி: இந்தியாவுக்கு சீன நாட்டவர்கள் 250 பேர் வருவதற்கு சட்டவிரோதமாக விசாக்கள் கிடைக்க உதவியதாக காங்கிரஸ் லோக்சபா எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது.
Recommended Video
மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோருக்கு சொந்தமான சென்னை, டெல்லி உள்ளிட்ட வீடுகளில் இன்று காலை சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 7 இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்றன.

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீதான ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில்தான் இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக கூறப்பட்டது. இவ்வழக்கில் ஏற்கவே ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் கைது செய்யபப்ட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்குக்காக சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமானவரித்துறை அதிகாரிகள் ஏற்கனவே பல முறை சோதனை நடத்தி இருந்தனர்.

இந்நிலையில் இன்று சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனை தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 250 சீன நாட்டவர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தனர். இவர்கள் இந்தியாவில் பணிசெய்வதற்கு சட்டவிரோதமாக விசா பெற்றுத் தந்தார் கார்த்தி சிதம்பரம்; இதற்காக ரூ50 லட்சம் லஞ்சம் பெற்றார் என புதிய வழக்கு பதிவு செய்துள்ளது சிபிஐ. இந்த வழக்கில்தான் இன்று சிபிஐ சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் சோதனைகள் நடத்தியது. பஞ்சாப்பில் சீனர்கள் பணி செய்வதற்காக சட்டவிரோதமாக விசாக்களை கார்த்தி சிதம்பரம் பெற்று தந்தார் என்கிறது இந்த வழக்கு. மேலும் கார்த்தி சிதம்பரத்தின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாகவும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
ப.சிதம்பரம் கருத்து
இச்சோதனை தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், இன்றைய சோதனைக்கான முதல் தகவல் அறிக்கையில் என் பெயர் இடம்பெறவில்லை. இன்றைய சோதனைகளில் எதுவும் கைப்பற்றப்படவும் இல்லை. டெல்லி, சென்னை வீடுகளில் இந்த சோதனைகள் நடைபெற்றன என்றார்.
செல்வபெருந்தகை கருத்து
இந்த சோதனை தொடர்பாக தமிழக சட்டசபை குழு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறுகையில், இதுபோன்ற சோதனைகள் நடத்துவது ஏன் என்று தெரியவில்லை. பழிவாங்கும் நோக்கில் சிபிஐ சோதனை நடத்தபப்ட்டு வருகிறது. சாதாரணமான சோதனைதான் என அதிகாரிகள் கூறுகின்றனர் என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications