முல்லைப் பெரியாறு அணை விவகாரம்- நாடாளுமன்ற வளாகத்தில் கேரளா எம்.பிக்கள் போராட்டம்
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையை கட்ட வலியுறுத்தி கேரளாவை சேர்ந்த அனைத்து கட்சி எம்.பிக்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முல்லைப் பெரியாறு அணை 1895-ம் ஆண்டு கட்டப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை உள்ள இடம் கேரளாவுக்கு சொந்தமானது. ஆனால் முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசுதான் பராமரித்து வருகிறது.

முல்லை பெரியாறு பிரச்சனை என்ன?
முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை நீரை தேக்க முடியும். ஆனால் கேரளா இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பான பல்வேறு வழக்குகளுக்குப் பின்னர் தற்போதைய நிலையில் 142 அடி வரைதான் நீர் தேக்கி வைக்கப்படுகிறது.

கேரளாவின் பிடிவாதம்
தமிழகத்தைப் பொறுத்தவரையில் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் முல்லைப் பெரியாறு அணையை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று ஆய்வும் நடத்தினார். அதேநேரத்தில் அணை கட்டி 200 ஆண்டுகள் ஆகிவிட்டது; அதனால் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது; இந்த அணையை இடித்துவிட்டு புதிய அணையை கட்ட அனுமதிக்க வேண்டும் என்கிறது கேரளா.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
ஆனால் உச்சநீதிமன்றம் அமைத்த வல்லுநர்கள் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அணையைப் பார்வையிட்டு முல்லைப் பெரியாறு அணை வலுவாகத்தான் இருக்கிறது என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. இருந்தபோதும் முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்பதில் கேரளா பிடிவாதம் காட்டி வருகிறது. இது தொடர்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் இறுதிகட்ட விசாரணையில் இருக்கிறது.

கேரளா எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்
இதனிடையே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை முன்வைத்து கேரளாவை சேர்ந்த அனைத்து கட்சி எம்.பிக்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டம் நடத்தினர். முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும்; முல்லை பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளுடன் கேரளா எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தமது ட்விட்டர் பக்கத்தில், முல்லைப் பெரியாறு அணை நிரம்பி ஏராளமான வீடுகள் வெள்ள நீரில் மூழ்கிவிட்டன. ஆகையால் தற்போதைய அணையை இடித்துவிட்டு புதிய அணையை கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
-
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை












Click it and Unblock the Notifications