மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஜப்பானுடன் ஒப்பந்தம்; 2026-ல் முடிவடையுமாம்- மத்திய அரசு
டெல்லி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு ஜப்பான் அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் இந்த கட்டுமானப் பணிகள் 2026-ல் நிறைவடையும் என்றும் நாடாளுமன்ற லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான எந்த அறிகுறியுமே தென்படவில்லை.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை
மொத்தம் ரூ.1,464 கோடி மதிப்பில் 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி அமைக்கப்படும் என்று அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கூறினார். ஆனாலும் கட்டுமானப் பணி தொடங்காத நிலையில் 2020-ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக அதிகரித்துள்ளது என்றது மத்திய அரசு.

ஒற்றை செங்கல்லும் உதயநிதியும்
அதேநேரத்தில் பஞ்சாப், அஸ்ஸாம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழக சட்டசபை தேர்தலில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாத விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என தமிழகம் முழுவதும் ஒற்றை செங்கல்லுடன் பிரசாரம் செய்து பெரிதும் கவனத்தை ஈர்த்தது. சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்ற நிலையில் அந்த ஒற்றை செங்கல்லை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பரிசு அளித்தார் உதயநிதி ஸ்டாலின்.

மத்திய அரசு பதில்
இந்த நிலையில் லோக்சபாவில் எம்.பிக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு ஜப்பான் அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2026-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நிறைவடையும் என கூறினார்.

தென் தமிழ்நாடு ஏமாற்றம்
அதேநேரத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என மத்திய அரசு தெளிவுபடுத்தப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடப் பணிகள் அடுத்த ஆண்டுதான் தொடங்க உள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மத்திய அரசு தரப்பில் தெளிவான விளக்கம் தரப்படவில்லை என்பதால் தென்தமிழ்நாட்டு மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications