இளைஞர்களே.. அதிக அளவில் திரண்டு வந்து வாக்களியுங்கள்.. பிரதமர் மோடி தமிழில் வேண்டுகோள்!
டெல்லி: இளைஞர்கள் பெரிய அளவில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தமிழில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

5 மாநில தேர்தல்
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் அசாம், மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் இன்று 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.

விறுவிறு வாக்குப்பதிவு
அதே வேளையில் தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது.இந்த மாநிலங்களில் அதிகாலை முதலே மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். கொரோனா தொற்று பயமுறுத்திய போதிலும் கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் மக்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

மோடி வேண்டுகோள்
இந்த நிலையில் இளைஞர்கள் பெரிய அளவில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவு வெளியிட்ட மோடி கூறுகையில், ' அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.

இளம் வாக்காளர்கள் திரள வேண்டும்
இந்த மாநிலங்களில் உள்ள மக்கள் அதிக வாக்குப்பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக இளம் வாக்காளர்கள் அதிக அதிக அளவில் திரண்டு வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று மோடி கூறினார்.

தமிழில் மோடி டுவிட்
இதே போல் தமிழில் பதிவு வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, ' தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுவதால், அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் இன்று நடைபெறும் தேர்தலில் அதிகளவில் வாக்களிக்குமாறு புதுச்சேரி மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்றும் மோடி தெரிவித்துளளார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications