இளைஞர்களே.. அதிக அளவில் திரண்டு வந்து வாக்களியுங்கள்.. பிரதமர் மோடி தமிழில் வேண்டுகோள்!
டெல்லி: இளைஞர்கள் பெரிய அளவில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தமிழில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

5 மாநில தேர்தல்
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் அசாம், மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் இன்று 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.

விறுவிறு வாக்குப்பதிவு
அதே வேளையில் தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது.இந்த மாநிலங்களில் அதிகாலை முதலே மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். கொரோனா தொற்று பயமுறுத்திய போதிலும் கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் மக்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

மோடி வேண்டுகோள்
இந்த நிலையில் இளைஞர்கள் பெரிய அளவில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவு வெளியிட்ட மோடி கூறுகையில், ' அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.

இளம் வாக்காளர்கள் திரள வேண்டும்
இந்த மாநிலங்களில் உள்ள மக்கள் அதிக வாக்குப்பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக இளம் வாக்காளர்கள் அதிக அதிக அளவில் திரண்டு வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று மோடி கூறினார்.

தமிழில் மோடி டுவிட்
இதே போல் தமிழில் பதிவு வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, ' தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுவதால், அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் இன்று நடைபெறும் தேர்தலில் அதிகளவில் வாக்களிக்குமாறு புதுச்சேரி மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்றும் மோடி தெரிவித்துளளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications