வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு... நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட் நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாகப் பல மாதங்களாகவே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலமே மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன.

NEET 2021 will be held on 12th September 2021 across the country says Education minister Dharmendra Pradhan

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய கொரோனா 2ஆம் அலையால் மோசமான பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டது. இதனால் +2 தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதே கொரோனா காரணமாக நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தச் சூழலில் நீட் தேர்வு வரும் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

மேலும், கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு நடைபெறும் நகரங்கள் 155இல் இருந்து 198ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ட்வீட் செய்துள்ளார். அதேபோல கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலான மையங்களில் நீட் தேர்வு நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு நடைபெறும் இடங்களில் மாஸ்க், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் NTA இணையதளத்தில் நாளை மாலை 5 மணி முதல் நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+