பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் திடீரென்று இந்தியாவில் முடக்கம்.. பின்னணி காரணம் என்ன?
டெல்லி: பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த பக்கத்துக்கு சென்றால் சட்டரீதியான கோரிக்கையை ஏற்று ட்விட்டர் முடக்கப்பட்டுள்ளதாக எழுதப்பட்டுள்ளது.
இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றன. மேலும் ஒவ்வொரு தலைவர்களும் ட்விட்டர் உள்பட பல்வேறு வலைதளங்களில் கணக்கு துவங்கி முக்கிய விபரங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு பாகிஸ்தானும் விதிவிலக்கல்ல. பாகிஸ்தானில் GovtofPakistan எனும் அதிகாரப்பூர்வ பக்கம் உள்ளது. இந்த பக்கத்தின் அந்த நாட்டின் முக்கிய அறிவிப்புகள் மற்றும் உலக நாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகள் தொடர்பான விபரங்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் தான் GovtofPakistan எனும் பாகிஸ்தானில் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அந்த பக்கத்தில், ‛‛சட்டப்ரீதியான கோரிக்கையை ஏற்று இந்த ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது'' என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் இந்திய அரசின் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் ட்விட்டர் பக்கம் முடக்கம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு முடக்கத்தின் பின்னணியில் இந்திய அரசு உள்ளதா அல்லது வேறு யாரெனும் உள்ளனரா? என்ற சந்தேகம் உள்ளது. தற்போது ஒவ்வொரு நாட்டிலும் சமூக வலைதள பயன்பாட்டுக்கு என்று அந்தந்த நாட்டினர் விதிகளை வகுத்துள்ளனர்.
இந்த விதிகளுக்கு உட்பட்டே சமூக வலைதள நிறுவனங்கள் செயல்பட வேண்டும். மேலும் நாட்டுக்கு எதிராக யாரெனும் தவறான தகவல்களை பரப்பினால் அந்த பதிவுகளை நீக்கம் செய்ய ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட நாடுகள் கோரிக்கை வைக்க முடியும்.
இந்த நடைமுறை இந்தியாவிலும் உள்ளது. அதன்படி பாகிஸ்தான் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதா, ஒருவேளை அப்படி இருப்பின் அதன் பின்னணி என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. இருப்பினும் தற்போதைய ட்விட்டர் பக்கம் முடக்கம் குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனால் குழப்பம் நிலவி வருகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications