பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் திடீரென்று இந்தியாவில் முடக்கம்.. பின்னணி காரணம் என்ன?
டெல்லி: பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த பக்கத்துக்கு சென்றால் சட்டரீதியான கோரிக்கையை ஏற்று ட்விட்டர் முடக்கப்பட்டுள்ளதாக எழுதப்பட்டுள்ளது.
இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றன. மேலும் ஒவ்வொரு தலைவர்களும் ட்விட்டர் உள்பட பல்வேறு வலைதளங்களில் கணக்கு துவங்கி முக்கிய விபரங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு பாகிஸ்தானும் விதிவிலக்கல்ல. பாகிஸ்தானில் GovtofPakistan எனும் அதிகாரப்பூர்வ பக்கம் உள்ளது. இந்த பக்கத்தின் அந்த நாட்டின் முக்கிய அறிவிப்புகள் மற்றும் உலக நாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகள் தொடர்பான விபரங்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் தான் GovtofPakistan எனும் பாகிஸ்தானில் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அந்த பக்கத்தில், ‛‛சட்டப்ரீதியான கோரிக்கையை ஏற்று இந்த ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது'' என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் இந்திய அரசின் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் ட்விட்டர் பக்கம் முடக்கம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு முடக்கத்தின் பின்னணியில் இந்திய அரசு உள்ளதா அல்லது வேறு யாரெனும் உள்ளனரா? என்ற சந்தேகம் உள்ளது. தற்போது ஒவ்வொரு நாட்டிலும் சமூக வலைதள பயன்பாட்டுக்கு என்று அந்தந்த நாட்டினர் விதிகளை வகுத்துள்ளனர்.
இந்த விதிகளுக்கு உட்பட்டே சமூக வலைதள நிறுவனங்கள் செயல்பட வேண்டும். மேலும் நாட்டுக்கு எதிராக யாரெனும் தவறான தகவல்களை பரப்பினால் அந்த பதிவுகளை நீக்கம் செய்ய ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட நாடுகள் கோரிக்கை வைக்க முடியும்.
இந்த நடைமுறை இந்தியாவிலும் உள்ளது. அதன்படி பாகிஸ்தான் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதா, ஒருவேளை அப்படி இருப்பின் அதன் பின்னணி என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. இருப்பினும் தற்போதைய ட்விட்டர் பக்கம் முடக்கம் குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனால் குழப்பம் நிலவி வருகிறது.
-
மோடிக்கு சிக்கல்.. அமெரிக்காவிலிருந்து வந்த முக்கிய அறிக்கை! முதுகில் குத்தும் டிரம்ப்? -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
ஈரான் போர் உச்சத்துல இருக்கு.. ஆனாலும் இந்தியாவில் தங்கம் விலை பெருசா உயரல! காரணம் இதுதான்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம்












Click it and Unblock the Notifications