ஆதாருடன் இணைக்கவில்லையா? பான் கார்ட் ஏப்.1 முதல் செயல்படாது.. வருமான வரித்துறை அதிரடி உத்தரவு
டெல்லி: ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் அட்டைகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயல்படாது என வருமான வரித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
இதனால் ஆதார் எண்ணுடன் பான் அட்டைகளை உடனடியாக இணைக்குமாறு வருமான வரித்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து, பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் இணைக்கும் பணியில் பொதுமக்கள் தீவிர காட்டி வருகின்றனர்.
தனி நபர் மேற்கொள்ளும் பணப் பரிவர்த்தனைகள், அசையா சொத்துகளை விற்பனை செய்தல், வங்கிக் கணக்கு தொடங்குதல் என அனைத்துக்கும் பான் அட்டை இன்றியமையாததாக மாறிவிட்டது. ரூ.10 ஆயிரத்துக்கு மேலான பரிவர்த்தனைகளை பான் அட்டை இல்லாமல் செய்ய முடியாது. எனவே நாட்டில் பெரும்பாலான மக்களிடம் பான் அட்டை இருக்கிறது.

பான் அட்டையின் பயன்பாடு ஒருபுறம் இருக்க, இதன் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், தனி நபர் பிரத்யேக அடையாள எண்ணான ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை பல ஆண்டுகளாகவே கூறி வருகிறது. அப்படி இணைக்கப்பட்டால், போலி பான் அட்டைகளின் பயன்பாடு ஒழிந்துவிடும் என்றும், வரி ஏய்ப்பு நடைபெறாது எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க பல அவகாசங்களும் வழங்கப்பட்டுவிட்டன. இருந்தபோதிலும், பலர் இன்னும் இவற்றை இணைக்காமல் உள்ளனர்.
இந்நிலையில்தான், வருமான வரித்துறை தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "வருமான வரித்துறை சட்டம் 1961-இன் படி வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் பான் அட்டையை வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்காவிட்டால், ஏப்ரல் 1-ம் தேதியுடன் அவர்களின் பான் எண் செயல்படாது. கடைசி நேரம் நெருங்குகிறது. இன்றே மேற்குறிப்பிட்ட இரண்டையும் இணைத்துவிடுங்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் இல்லாதவர்கள், அசாம், ஜம்மு காஷ்மீர், மேகாலயா மாநிலங்களில் வசிப்பவர்கள், கடந்த ஆண்டில் 80 வயதை எட்டியவர்கள் ஆகியோருக்கு இந்த நடவடிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க www.incometax.gov.in என்ற இணையப் பக்கத்தில் சென்று ரூ.1000 கட்டணமாக செலுத்தி பின்னர் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இணைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர்












Click it and Unblock the Notifications