இந்த Attitudeஐ மாற்றுங்கள்! இல்லாவிட்டால்.. ஆப்சென்ட்டான பாஜக எம்பிக்களுக்கு பிரதமர் கடும் வார்னிங்?
டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளை சேர்ந்த பாஜக எம்பிக்கள் அவைக்கு வருகை தராதது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்ததாக தகவல்கள் வெளியாகின.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று 6 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பே கூட்டத் தொடரில் கட்டாயம் தினந்தோறும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மத்திய அரசு கொண்டு வரும் மசோதாக்களை ஆதரிக்க ஆளும் கட்சி எம்பிக்கள் இருப்பது அவசியம் என்பதாலும் அதே போல் அரசு கொண்டு வரும் மசோதாக்களை தடுப்பதற்காக எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் இருப்பது அவசியம் என்பதாலும் இந்த கொறடா உத்தரவு வழங்கப்படுகிறது.

கூட்டத் தொடர்
இந்த நிலையில் ஆளும் பாஜகவின் எம்பிக்கள் கடந்த சில தினங்களாக கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. ராஜ்யசபாவில் 12 எம்பிக்கள் நீக்கத்தை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பாஜக நாடாளுமன்றக் கூட்டம்
அவர்களுக்கு துணையாக மக்களவையிலும் கடும் அமளி ஏற்படுகிறது. இதை சமாளிக்க இரு அவைகளிலும் ஆளும் கட்சி எம்பிக்கள் போதிய அளவில் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்றைய தினம் பாஜக நாடாளுமன்ற எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது.

எச்சரிக்கை
அப்போது பிரதமர் மோடி கூட்டத் தொடருக்கு வராத எம்பிக்களிடம் மிகவும் கடிந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் கூறுகையில் "குழந்தைகள் கூட ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்வதை விரும்ப மாட்டார்கள். எனவே எம்பிக்கள் அவர்களது செயல்பாட்டை மாற்றிக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் மாற்றங்கள் தானாக நிகழும்" என பிரதமர் எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாபஸ்
இந்த நிலையில் 12 ராஜ்யசபா எம்பிக்கள் நீக்கத்தை திரும்ப பெறுமாறு ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அது போல் மக்களவையில் நாகாலாந்தில் ஆயுத படை சிறப்பு அதிகார சட்டத்தால் 14 அப்பாவிகள் கொல்லப்பட்ட நிலையில் அந்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்பது குறித்து விவாதிக்க மக்களவையில் தேசிய மக்கள் கட்சியின் எம்பி அகதா சங்மா ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸை கொடுத்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications