பாட்டிலுக்கு 70% வரிதானே-அரசாங்கத்துக்கு நன்கொடைன்னு நினைச்சுப்போம்- ஒரிஜனல் குடிமகனின் செம விளக்கம்
டெல்லி: மதுபானங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதைப்பற்றி கவலைப்படாதவர்களாக சாலைகளில் கொளுத்தும் வெயிலில் சரக்கு பாட்டில்களுக்காக தவம் கிடக்கின்றனர் குடிமகன்கள்.
கொரோனாவுக்காக அமல்படுத்தப்பட்ட லாக்டவுன், மதுபான கடைகளை மூட வைத்தது. இன்னமும் கொரோனாவின் பாதிப்பு ஓயவில்லை. மாறாக உச்சமாகத்தான் அதிகரித்து கொண்டே போகிறது.

ஆனாலும் கட்டுப்பாடுகள் தளர்வு என்ற பெயரில் பெரும்பாலான மாநிலங்களில் மதுபான கடைகள் திறந்துவிடப்பட்டுவிட்டன. இதனால் குடிமகன்கள் பெரும் கொண்டாட்டத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர்.
மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநில அரசுகள் நேற்று மாலைதான் மதுபான கடைகளைத் திறக்க முடிவு செய்தன. தமிழக அரசும் நேற்று இரவுதான் மதுபான கடைகளை திறக்கலாம் என முடிவெடுத்தது. ஆனால் இன்று சென்னையில் மட்டும் மதுகடைகளை திறக்கப் போவது இல்லை என அறிவித்திருக்கிறது தமிழக அரசு.
இதனிடையே டெல்லி மற்றும் ஆந்திராவில் மதுபான விலைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு எல்லாம் எங்களை பாதிக்காது என்கிற தொனியில் இன்றும் நீண்ட் வரிசையில் குடிமகன்கள் காத்திருந்தனர்.
#WATCH A man outside a liquor shop in Laxmi Nagar, Delhi says,"I'm here since 6 am. Shop was supposed to open at 9 am but police arrived at 8:55 am...who will be responsible if something untoward happens here? We've no issue with 70% tax, it's like a donation from us to country". pic.twitter.com/xnhycDLL4y
— ANI (@ANI) May 5, 2020
இப்படி நீண்ட வரிசையில் காத்திருந்த டெல்லி குடிமகன் ஒருவர் கூறுகையில், நான் காலை 6 மணி முதல் வரிசையில் காத்திருக்கிறேன். காலையில் 9 மணிக்கு கடை திறந்துவிடுவார்கள். ஆனால் 8.55 மணிக்கே போலீஸ் வந்து நிலைமை மோசமாகிவிட்டால் என்ன செய்வது? அதனால் முன்கூட்டியே வந்துவிட்டேன்.
டெல்லி அரசு 70% வரி விதித்திருப்பதாக கூறியிருக்கிறது. அதை பற்றி எந்த கவலையும் இல்லை. அரசுக்கு நாங்கள் நன்கொடை கொடுப்பதாக நினைத்து கொள்கிறோம் என்கிறார் அசால்ட்டாக.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications