"உடலுறவு" மூலம் பரவும் மங்கி பாக்ஸ்! ஆணுறை யூஸ் பண்ணுங்க.. எச்சரிக்கும் மருத்துவ வல்லுநர்
டெல்லி: மங்கி பாக்ஸ் குறித்த அச்சம் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், இது தொடர்பாக முக்கிய எச்சரிக்கை ஒன்றைச் சுகாதார வல்லுநர் கொடுத்துள்ளார்.
கொரோனா முடிந்துள்ள நிலையில், அடுத்து மங்கி பாக்ஸ் பாதிப்பு வேகமாகப் பரவ தொடங்கி உள்ளது. உலகின் பல நாடுகளில் சில ஆயிரம் பேருக்கு இந்த மங்கி பாக்ஸ் கண்டறியப்பட்டு உள்ளது.
ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு இதை பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்துவிட்டது. அதேபோல அமெரிக்காவும் கேஸ்கள் அதிகரிப்பதால் இதைச் சுகாதார அவசர நிலையாக அறிவித்து உள்ளது.

மங்கி பாக்ஸ்
இதனிடையே ஆண்களுடன் உறவு கொள்ளும் ஆண்களுக்கே மங்கி பாக்ஸ் ரிஸ்க் அதிகமாக உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதேநேரம் யாருக்கு வேண்டுமானாலும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது. பாலியல் ரீதியான தொடர்புகள் மூலம் வைரஸ் பரவலாம் என அஞ்சப்பட்டது. எனவே, நிறைய பாட்னர்களை வைத்து இருக்கும் நபர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்கும்படி ஆய்வாளர்கள் கேட்டுக் கொண்டனர்.

தவிர்க்க வேண்டும்
மங்கி பாக்ஸ் நோயாளிகளின் புண்கள், உடல் திரவங்கள், சுவாசத் துளிகள் மூலமே அது மற்றவர்களுக்குப் பரவும் ஆபத்து உள்ளதாக மூத்த நுரையீரல் டாக்டர் அவி குமார் தெரிவித்துள்ளார். மங்கி பாக்ஸ் நோயாளி உடன் நேரடி தொடர்பு, அவர்களுடன் உடலுறவு கொள்வது, நோயுற்ற விலங்குகள் அருகில் இருப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும், மங்கி பாக்ஸ் நோயாளிகள் பயன்படுத்திய பொருட்களை முறையாகச் சுத்தம் செய்யாமல் மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உடலுறவு
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அடிக்கடி சோப்பு நீரில் கைகளைக் கழுவ வேண்டும். நோயாளிகளை மருத்துவமனையில் முறையாகத் தனிமைப்படுத்த வேண்டும். மேலும், உடலுறவு வைத்துக் கொள்ளும்போது பாதுகாப்பான உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். ஆணுறைகள் அணிவது முக்கியம் ஏனென்றால், மங்கி பாக்ஸ் நோயாளிகள் உடன் பாலியல் உறவுகள் மூலமும் இது பரவும் ஆபத்து உள்ளது" என்றார்.

நெருங்கிய தொடர்பு
இது இரு வகைகளில் மற்றவர்களுக்குப் பரவும். முதலில் மங்கி பாக்ஸ் பாதித்த விலங்குகள் கடிப்பது, கீறுவது மூலம் பரவும். அடுத்து மனிதர்களிடம் இருந்து மற்றொரு மனிதர்களுக்குப் பரவலாம். ஆனால், இது கோவிட்-19 போல வேகமாகப் பரவாது. நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே பரவும் என்பதால் அச்சம் தேவையில்லை. இந்தியாவில் இதுவரை 9 பேருக்கு மங்கி பாக்ஸ் கண்டறியப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

எப்படிப் பரவும்
மங்கி பாக்ஸ் வைரசுக்கு அதிக காய்ச்சல், நிணநீர் சுரப்பிகள், கொப்புளங்கள் போன்றவை தான் ஆரம்ப அறிகுறிகளாகும். கடந்த சில மாதங்களில் மட்டும் பல ஆயிரம் பேருக்கு இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ள போதிலும், 10க்கும் குறைவான நபர்களே இதனால் உயிரிழந்து உள்ளனர். வைரஸ் பாதித்த நபரிடம் இருந்து வெளிவரும் நீர் மூலமே இது மற்றவர்களுக்குப் பரவும்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications