நல்ல சந்தர்ப்பம்..! சமூகத்தில் ஒற்றுமை சகோதரத்துவம் மேம்படுத்தட்டும்..! பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து
டெல்லி : ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் இந்த நல்ல சந்தர்ப்பம் நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வை மேம்படுத்தட்டும் எனவும், அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும் வளமும் கிடைக்கட்டும் பிரதமர் வெளியிட்டுள்ள ரம்லான் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் முழுவதும் 30 நாட்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், 30வது நாளில் பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.
அதிகாலை முதல் மாலை நோன்பு முடியும் வரை தண்ணீர் கூட அருந்தாமல் மிக கடுமையான நோன்பினை இஸ்லாமிய மக்கள் கடைபிடித்து, மாலை தொழுகைக்குக் பிறகே மீண்டும் உணவருந்துவது வழக்கம்.

ரமலான் பண்டிகை
அந்த வகையில், வானில் முதல் பிறை கடந்த மாதம் 2ஆம் தேதி தெரிந்ததால் சவூதி அரேபியா, கத்தார், குவைத், உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இன்று ரமலான் நோன்பு தொடங்கியது . இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரமலான் நோன்பு பண்டிகை 3ஆம் தேதி முதல் கடைபிடிக்கப்படும் என தலைமை காஜி தெரிவித்தார்.

இஸ்லாமிய மக்கள்
இதனையடுத்து நோன்பினை தீவிரமாக கடைபிடித்த இஸ்லாமிய பெருமக்கள் தங்கள் முக்கிய கடைமையினை ஆற்றினர். இந்நிலையில் நேற்று பிறை தென்பட்டதையடுத்து இந்தியாவில் இன்று ரம்ஜான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.

சிறப்பு தொழுகை
கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக சிறப்பு தொழுகை நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
Recommended Video

பிரதமர் வாழ்த்து
இந்நிலையில் ரமலான் பண்டிகை கொண்டாடும் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "ஈத்-உல்-பித்ர் நல்வாழ்த்துக்கள். இந்த நல்ல சந்தர்ப்பம் நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வை மேம்படுத்தட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும் வளமும் கிடைக்கட்டும்." என கூறியுள்ளார்.
-
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications