அச்சமில்லாதவர், புத்திசாலி.. மன்மோகன் சிங் பிறந்த நாளில் ராகுல் காந்தி போட்ட வாழ்த்து ட்வீட்
டெல்லி : மன்மோகன் சிங்கின் பிறந்த நாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, மன்மோகன் அச்சமில்லாதவர். நாடு சந்தித்துவரும் பிரச்சினைகளை புத்திசாலித்தனத்துடன் நன்கு புரிந்து கொண்டு செயல்படுபவர். அவரிடம் இருந்து அதிகமாக கற்க வேண்டும். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் நாட்டின் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். காங்கிரஸ் மூத்த தலைவரா மன்மோகன் சிங் இன்று தனது 89-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், மூத்த தலைவர்கள் சச்சின் பைலட், முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித் உள்பட பலர் மன்மோகன் சிங்கிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நீண்ட ஆயுளுடன் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் "தொலைநோக்குள்ளவர், அர்ப்பணிப்புள்ள தேசியவாதி, பேச்சாளர் டாக்டர் மன்மோகன் சிங், இந்தியாவின் தலைவராவதற்கு நீங்கள் தகுதியானவர். உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
காங்கிரஸ் கட்சியும், ஒட்டுமொத்த தேசமும் உங்களையும், உங்கள் பங்களிப்பையும் இன்றும், நாள்தோறும் வாழ்த்தும். அனைத்தும் செய்தமைக்கு உங்களுக்கு நன்றி" என கூறியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் "பிறந்தநாள் வாழ்த்துகள் மன்மோகன் சிங் ஜி. மன்மோகன் அச்சமில்லாதவர். நாடு சந்தித்துவரும் பிரச்சினைகளை புத்திசாலித்தனத்துடன் நன்கு புரிந்து கொண்டு செயல்படுபவர். அவரிடம் இருந்து அதிகமாக கற்க வேண்டும். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.
சோனியா என் யோசனையை கேட்கவில்லை... கேட்டிருந்தால் காங்கிரஸ் சரிந்திருக்காது.. பரிதாபபடும் அத்வாலே..!