இனி ரயில் நிலையங்களில் 'இதை' பயன்படுத்த முடியாது.. ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு
டெல்லி: ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை இந்தியாவின் அனைத்து ரயில்நிலையங்களிலும், ரயில்களிலும் வரும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) முதல் பயன்படுத்த முடியாது. இதற்கான உத்தரவை ரயில்வே அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி முதல் நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என அறிவித்தார். பொது மக்கள் அனைவரும் துணிப் பைகளை உபயோகிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த பிரதமர், நாம் பூமி தாயைப் பாதுகாக்க வேண்டும் என்றும் ரசாயன பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை அடுத்து ரயில்வே அமைச்சகம் அனைத்து ரயில்வே மண்டலங்கள் மற்றும் கோட்டங்களுக்கும் பிளாஸ்டிக் தடை தொடர்பாக முக்கிய உத்தரவு ஒன்றை சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளது.
இதன்படி நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் மற்றும் ரயில்களில் ஒருமுறை பயன்படுத்தி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு வரும் காந்தி ஜெயந்தி முதல் (அக்டோபர் 2) தடை விதிக்கப்படுகிறது. 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பாலீதினுக்கு தடை விதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க அக்டோபர் 2ம் தேதி முதல் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் தடை என்பது ரயில் நிலையங்களில் மட்டுமல்ல நாடு முழுவதுமே தடை விதிக்கப்படுவதால், ஒருமுறை பயன்படுத்தி எறியும் பிளாஸ்டிக் உற்பத்திக்கும் இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட உள்ளது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications