இனி ரயில் நிலையங்களில் 'இதை' பயன்படுத்த முடியாது.. ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு
டெல்லி: ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை இந்தியாவின் அனைத்து ரயில்நிலையங்களிலும், ரயில்களிலும் வரும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) முதல் பயன்படுத்த முடியாது. இதற்கான உத்தரவை ரயில்வே அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி முதல் நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என அறிவித்தார். பொது மக்கள் அனைவரும் துணிப் பைகளை உபயோகிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த பிரதமர், நாம் பூமி தாயைப் பாதுகாக்க வேண்டும் என்றும் ரசாயன பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை அடுத்து ரயில்வே அமைச்சகம் அனைத்து ரயில்வே மண்டலங்கள் மற்றும் கோட்டங்களுக்கும் பிளாஸ்டிக் தடை தொடர்பாக முக்கிய உத்தரவு ஒன்றை சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளது.
இதன்படி நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் மற்றும் ரயில்களில் ஒருமுறை பயன்படுத்தி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு வரும் காந்தி ஜெயந்தி முதல் (அக்டோபர் 2) தடை விதிக்கப்படுகிறது. 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பாலீதினுக்கு தடை விதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க அக்டோபர் 2ம் தேதி முதல் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் தடை என்பது ரயில் நிலையங்களில் மட்டுமல்ல நாடு முழுவதுமே தடை விதிக்கப்படுவதால், ஒருமுறை பயன்படுத்தி எறியும் பிளாஸ்டிக் உற்பத்திக்கும் இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications