விவசாயிகள் படுகொலை.. விரிவான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை தொடர்பாக விரிவான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் கறுப்புக் கொடி பேரணி நடத்திய போது ஜீப்பை ஏற்றி விவசாய படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பான வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராதான் இந்த படுகொலைகளுக்கு காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் அஜிஸ் மிஸ்ரா இதனை மறுத்து வருகிறார். மேலும் ஆஷிஸ் மிஸ்ரா மீது உ.பி. போலீசார் கொலை வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா
லக்கிம்பூர் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அஜய் மிஸ்ரா நேற்று சந்தித்து பேசினார். அப்போது லக்கிம்பூர் படுகொலை சம்பவங்கள் குறித்து அவர் அமித்ஷாவிடம் விளக்கியதாக கூறப்படுகிறது.

உச்சநீதிமன்றம் தாமாக வழக்குப் பதிவு
இந்த படுகொலைகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி இரண்டு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினர். பின்னர் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து லக்கிம்பூர் படுகொலைகள் தொடர்பாக வழக்கு பதிவு செய்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் இன்று இந்த வழக்கை விசாரித்தது.

உச்சநீதிமன்றத்தில் உ.பி. அரசு விளக்கம்
இன்றைய விசாரணையின் போது, லக்கிம்பூர் படுகொலைகள் சம்பவம் தொடர்பாக யார் யார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த உ.பி. மாநில அரசு தரப்பு வழக்கறிஞர், லக்கிம்பூர் படுகொலைகள் தொடர்பாக ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இதையடுத்து லக்கிம்பூர் படுகொலைகள் தொடர்பான விரிவான விசாரணை அறிக்கையை நாளைக்குள் தாக்கல் செய்ய உ.பி. மாநில அரசுக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது. மேலும் நாளை தாக்கல் செய்யும் விரிவான விசாரணை அறிக்கையில் இப்படுகொலைகள் தொடர்பாக யார் யார் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? யார் யார் கைது செய்யப்பட்டுள்ளனர்? என்கிற விரிவான விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications