அதிகமாக காற்றை மாசுபடுத்தும் நாடுகளின் பட்டியல்.. இந்தியா பிடித்த இடம் என்ன தெரியுமா?
கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியேற்றுவதில் உலக அளவில் இந்தியா 4வது இடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video

டெல்லி: கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியேற்றுவதில் உலக அளவில் இந்தியா 4வது இடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு உலக அளவில் 7 சதவீதம் அளவுக்கு இந்தியா கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியேற்றியுள்ளது.
கார்பன் ப்ராஜட் என்ற அமைப்பு பட்டியல் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியேற்றுவதில் சீனா (27 சதவீதம்) முதல் இடத்தில் உள்ளது.

காற்று மாசு
2018 ம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் கார்பன் டை அக்ஸைடு உமிழ்வு 6.3 சதவீதமாக அதிகரிக்க வாய்புள்ளதாக கூறப்படுகிறது. எரிப்பொருட்களால் இந்த மாசு ஏற்பட்டுள்ளது. நிலக்கரி (7.1 சதவீதம் ) ஆயில் (2.90) கியாஸ் (6 சதவீதம்) என காற்று மாசடைவது தெரியவந்துள்ளது.

இந்தியா 7 சதவீதம்
கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை சீனா (27 சதவிகிதம்) அமெரிக்கா (15 சதவீதம்), ஐரோப்பிய யூனியன் (10 சதவீதம்), இந்தியா (7 சதவீதம்) என மூன்றுகள் நாடுகள் இடம்பெற்றுள்ளன. தற்போது, 41 சதவீதமாக உள்ள காற்றுமாசு, 2018 ம் ஆண்டில் 1.8 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் ஏற்கனவே கண்ணுக்கு தெரியாத அளவு காற்று மாசு ஏற்படுகிறது. பலருக்கு மூச்சு திணறல் உள்ளிட்டவை ஏற்படுகின்றன. காற்று மாசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

பட்டியல்
சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, ஈரான், சவுதி அரேபியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன. 2015 ம் ஆண்டு பாரிஸ் மாநாட்டில் கூறப்பட்டது போல, சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் காற்று மாசுவை கட்டுப்படுத்த உத்வேகம் எடுத்துக்கொண்டன. அதன்படி, இந்த குறிப்பிட்ட நாடுகளில் கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வு 40 சதவீதமாக குறைந்துள்ளது. அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் ஐ.நா சபையில் நடக்கும் கூட்டத்திலும், இந்த கூட்டமைப்பு நாடுகள் புதிய உக்தியை முன்னெடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆய்வு முடிவுகள்
இந்தியாவில் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியேற்றுவதில் வழக்கத்தை காட்டிலும் 2017-ம் ஆண்டு 2 சதவீதம் அதிகரித்துள்ளது. சீனாவிலும், இந்தியாவிலும் பொருளாதார ரீதியாக நிலக்கரி பயன்பாடு அதிகமாக உள்ளது. இதற்கு மாற்றாக 2020 ம் ஆண்டுக்குள் சூரிய மின்சக்தி, காற்றாலை மின்சார பயன்பாடு அதிகரித்தால் காற்று மாசு குறையும் என சோலார் எனர்ஜி கூட்டமைப்பு நாடுகள் மாநாட்டில் இந்தியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications