33ம் ஆண்டு நினைவு நாள்.. ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் சோனியா, கார்கே அஞ்சலி.. மோடி இரங்கல்
டெல்லி: தமிழ்நாட்டில் தற்கொலை படைத்தாக்குலில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி தெரிவித்துள்ளார். சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரசியல் வாரிசாக இருந்தவர் ராஜீவ் காந்தி. இவர் அரசியலுக்குள் வந்து தாய் இந்திரா காந்தி விட்டு சென்ற பிரதமர் பதவியை எட்டிப்பிடித்தார்.

அதன்பிறகு தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்பத்தூரில் 1991ம் ஆண்டு மே 21ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். மனித வெடிகுண்டு தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.
இந்த படுகொலை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மே 21ம் தேதியான இன்று ராஜீவ்காந்திக்கு 33வது நினைவுநாளாகும். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி ஆகியோர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்துக்கு சென்று இன்று அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல் பிரதமர் மோடியும், ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளான இன்று அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் டெல்லி, தமிழ்நாடு உள்பட ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திலும் நிர்வாகிகள், தொண்டர்கள் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஸ்ரீபெரும்பத்தூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திலும் நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications