மகாராஷ்டிரா.. பாஜக சீனியர் எம்எல்ஏ காளிதாஸ் கொலம்ப்கர் இடைக்கால சபாநாயகராக நியமனம்!
Recommended Video
டெல்லி: மகாராஷ்டிரா சட்டசபை இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாஜகவின் சீனியர் எம்எல்ஏவாகும்.
மகாராஷ்டிராவில் பட்னாவிஸ் தலைமையிலான அரசு, 27ம் தேதி புதன்கிழமை, மாலை 5 மணிக்குள், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கியது.

இதற்காக தற்காலிக சபாநாயகரை நியமிக்க வேண்டும் என்றும், உத்தரவிட்டது. மகாராஷ்டிரா சட்டமன்றத்தில், காங்கிரஸின் பாலாசாகேப் தோரத் மற்றும் பாஜகவின் காளிதாஸ் கொலம்ப்கர் ஆகிய இரு எம்எல்ஏக்கள் சரிசமமாக மூத்த எம்எல்ஏக்களாக உள்ளனர். இருப்பினும் 6 பேர் கொண்ட பட்டியலை ஆளுநரிடம் சட்டசபை செயலாளர் வழங்கினார்.
உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில், இடைக்கால சபாநாயகர் யார் என்பதை ஆளுநர் தீர்மானித்தார். இன்று மாலை ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பின்படி, காளிதாஸ் கொலம்ப்கர் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.
நாளை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக, அனைத்து எம்எல்ஏக்களும் பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது. ஆனால் பட்னாவிஸ் இன்று மாலை திடீரென முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். எனவே, நாளை அனைத்து எம்எல்ஏக்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைக்கும் வேலைதான் காளிதாஸ் கொலம்ப்கருக்கு இருக்கும். வேறு அஜென்டா இல்லை.
முன்னதாக, ராதாகிருஷ்ணா விகே-பாட்டீல் (பாஜக), காளிதாஸ் கொலம்ப்கர் (பாஜக), பாபன்ராவ் பிகாஜி பச்புட், (பாஜக), பாலாசாகேப் தோரத் (காங்கிரஸ்), கே.சி பத்வி (காங்கிரஸ்), திலீப் வால்ஸ் பாட்டீல் (என்.சி.பி) ஆகிய 6 பேரின் பெயர்கள் ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாடு 69% இட ஒதுக்கீடு.. உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை.. விஜய்க்கு பெரிய சவால் -
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications