இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க!
டெல்லி : ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றாலே ஓட்டுநர் உரிமம் வழங்கும் புதிய விதிமுறைகள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியம்.

ஓட்டுநர் உரிமம் அவசியம்
தற்போது எந்த வாகனம் ஓட்டுவதற்கும் பயிற்சி பெறுபவர்கள் ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றிருந்தாலும், ஆர்.டி. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ அதிகாரி முன்பு வாகனத்தை ஓட்டிக் காண்பிக்க வேண்டும். மோட்டார் சைக்கிள் என்றால் 8 வடிவில் ஓட்டி காண்பிக்க வேண்டும். அப்போதுதான் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். இதுதான் இப்போதைய நடைமுறை.

புதிய நடைமுறை
இந்த நிலையில் ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் புதிய நடைமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த நடைமுறையின்படி அரசால் அங்கீகரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களில் வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சி பெறுபவர்களுக்கு, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வில் பங்கேற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

8 போட வேண்டாம்
பயிற்சி மையங்கள் உயர்தர பயிற்சி வழங்குவதற்கான பிரத்யேக பாதையை கொண்டிருக்க வேண்டும். தேவையான போக்குவரத்து விதிகள் அனைத்தும் பயிற்சி பெறுபவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த மையங்களில் பயிற்சி பெறுபவர்கள் ஆர்.டி. அலுவலகத்துக்கு வந்து நேரடியாக ஓட்டி கட்ட வேண்டிய அவசியம் இல்லை.

ஜுலை 1 முதல் அமலுக்கு வருகிறது
அடுத்த மாதம் ஜுலை 1-ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரு இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. விதிமுறை மீறல் மற்றும் போதிய திறன் இல்லாமல் ஏற்படும் சாலை விபத்துக்களை குறைப்பதற்காக இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
ஜனநாயகன் படத்தை இன்று பார்வையிடும் மறு தணிக்கை குழு.. விஜய்க்கு பெரிய ட்விஸ்ட் இருக்கு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்?












Click it and Unblock the Notifications