இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க!
டெல்லி : ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றாலே ஓட்டுநர் உரிமம் வழங்கும் புதிய விதிமுறைகள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியம்.

ஓட்டுநர் உரிமம் அவசியம்
தற்போது எந்த வாகனம் ஓட்டுவதற்கும் பயிற்சி பெறுபவர்கள் ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றிருந்தாலும், ஆர்.டி. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ அதிகாரி முன்பு வாகனத்தை ஓட்டிக் காண்பிக்க வேண்டும். மோட்டார் சைக்கிள் என்றால் 8 வடிவில் ஓட்டி காண்பிக்க வேண்டும். அப்போதுதான் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். இதுதான் இப்போதைய நடைமுறை.

புதிய நடைமுறை
இந்த நிலையில் ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் புதிய நடைமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த நடைமுறையின்படி அரசால் அங்கீகரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களில் வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சி பெறுபவர்களுக்கு, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வில் பங்கேற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

8 போட வேண்டாம்
பயிற்சி மையங்கள் உயர்தர பயிற்சி வழங்குவதற்கான பிரத்யேக பாதையை கொண்டிருக்க வேண்டும். தேவையான போக்குவரத்து விதிகள் அனைத்தும் பயிற்சி பெறுபவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த மையங்களில் பயிற்சி பெறுபவர்கள் ஆர்.டி. அலுவலகத்துக்கு வந்து நேரடியாக ஓட்டி கட்ட வேண்டிய அவசியம் இல்லை.

ஜுலை 1 முதல் அமலுக்கு வருகிறது
அடுத்த மாதம் ஜுலை 1-ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரு இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. விதிமுறை மீறல் மற்றும் போதிய திறன் இல்லாமல் ஏற்படும் சாலை விபத்துக்களை குறைப்பதற்காக இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications