விவசாய சட்டங்களை வாபஸ் பெறும் மசோதா- பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கிறது
டெல்லி: விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் கடந்த ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களில் 700 முதல் 800 விவசாயிகள் வரை மாண்டு போயுள்ளனர்.
பஞ்சாப், ஹரியானா, உ.பி. உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இந்த விவசாயிகளின் போராட்டம் எதிரொலித்தன. விவசாயிகளின் இந்த போராட்டங்களுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

விவசாய சட்டங்கள் வாபஸ்
இந்நிலையில் அண்மையில் திடீரென பிரதமர் மோடி, இந்த 3 விவசாய சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, விவசாய சட்டங்களின் நன்மைகளை ஒருதரப்பினருக்கு புரியவைப்பதில் தோல்வி அடைந்துவிட்டோம். அதனால் இந்த சட்டங்களைத் திரும்பப் பெறுகிறோம். நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே இந்த விவசாய சட்டங்கள் முறைப்படி ரத்து செய்யப்படும். ஆகையால் விவசாயிகள் போராட்டங்களை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

விவசாயிகள் திட்டவட்டம்
ஆனாலும் டெல்லியில் போராடும் விவசாயிகளோ, விவசாய சட்டங்கள் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படும் வரை போராட்டங்கள் தொடரும்; அத்துடன் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்; அதுவரை வீடு திரும்பப் போவது இல்லை எனவும் அறிவித்திருந்தனர்.

டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம்
இதனிடையே டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video

நாடாளுமன்ற குளிர்கால கூட்டம்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் 29-ந் தேதி தொடங்குகிறது. இக்கூட்டத் தொடர் டிசம்பர் மாதம் 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்றக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. வரும் 29-ந் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத் தொடரில் கிரிப்டோகரன்சிகளுக்குத் தடை, ரிசர்வ் வங்கியே டிஜிட்டல் கரன்சிகளை வெளியிடுதல் உள்ளிட்ட 26 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. மீன்வளம் சார் மசோதா, சிபிஐ-அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகள் நீடிப்பது ஆகியவை தொடர்பான மசோதாக்களும் நடப்பு கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications