தீவிரவாதத்திற்கு பதிலடி.. இந்தியாவிற்கு அமெரிக்கா ஆதரவு
Recommended Video

டெல்லி: எல்லை தாண்டிய, தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பதிலடி தாக்குதலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று, அந்த நாட்டு பாதுகாப்பு துறை ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் படை வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் ஜான் போல்டன்.
இந்த ஆலோசனையின் போது, தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவின் இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

சுய பாதுகாப்பு
தனது சுய பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கு இந்தியாவிற்கு முழு அதிகாரம் உள்ளது. இதுதொடர்பாக நான் அஜித் தோவலிடம் தொலைபேசியில் இருமுறை பேசியுள்ளேன். அமெரிக்காவின் இரங்கலையும் அப்போது அவரிடம் நான் தெரிவித்துக் கொண்டேன், என்று ஜான் போல்டன் கூறியுள்ளார்.
|
பாகிஸ்தான் பங்கு
ஜான் போல்டன் மேலும் கூறுகையில், பாகிஸ்தான் தீவிரவாத ஆதரவு இயக்கங்களுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும், என்பதில் அமெரிக்கா மிகவும் தெளிவாக இருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்கா தொடர்ந்து பாகிஸ்தானிடம் ஆலோசனை நடத்தவும் தயாராக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அச்சுறுத்தலாகிறது
முன்னதாக, அமெரிக்க வெள்ளை மாளிகை செயலாளர் மைக் போம்பியோ, டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு நாங்கள் துணை நிற்கிறோம். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். இது சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது, என்று கடுமையான வார்த்தைகளில் குறிப்பிட்டிருந்தார்.
|
இந்தியாவின் வெற்றி
பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படக்கூடிய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு, புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நாடுகளில் இருந்து பாகிஸ்தானை தனிமைபடுத்தும், முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளிடம், புல்வாமா தாக்குதலின் பின்னணி பற்றி இந்தியா விளக்கியுள்ளது. இதில் அமெரிக்காவின் ஆதரவு என்பது முக்கியமான மைல்கல் ஆகும்.
-
இந்தா வாங்கிக்கோ.. என்ன பெரிய எஃப்பிஐ? அமெரிக்காவை அலற விட்ட ஈரான் ஹேக்கர்கள்! ஷாக்குக்கு மேல் ஷாக்! -
நீங்க ஒன்னும் மன்னர் கிடையாது.. அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா?












Click it and Unblock the Notifications