தூய்மை நகரங்கள் பட்டியல்... தொடர்ந்து 4ம் ஆண்டு... இந்தூர் முதலிடம்... சூரத் 2ஆம் இடம்!!
டெல்லி: தொடர்ந்து நான்காவது ஆண்டாக நம்பர் ஒன் தூய்மையான நகரமாக இந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய ஹவுசிங் மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி டெல்லியில் ஸ்வச் சர்வேக்ஷன்தான் 2020 விருது வழங்கினார்.
இதுதொடர்பான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் ட்விட்டர் பதிவில், ''நாட்டிலேயே தூய்மையான நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்தூர் முதலிடத்தில் உள்ளது. நகரை தூய்மையாக வைத்துக் கொள்ள மக்களும், ஆட்சியாளர்களும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் நகராட்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

இந்தூர் நகரம் முதலிடம் பெற்றிருக்க, இரண்டாம் இடத்தை சூரத் பெற்றுள்ளது. மூன்றாம் இடத்தை நவி மும்பை பெற்றுள்ளது. இதற்காக குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும், இதேபோல் நவி மும்பை நகராட்சிக்கும் பூரி நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியால் ஸ்வச் சர்வேக்ஷன் திட்டம் 2016ல் துவக்கி வைக்கப்பட்டது. அந்த ஆண்டு தூய்மையான நகரமாக மைசூர் தேர்வு செய்யப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் இந்தூர் முதலிடத்தில் இருந்து வருகிறது. நடப்பாண்டிலும் முதலிடம் பிடித்துள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய ஆய்வு ஸ்வச் சர்வேக்ஷன்தான். இதில் 4242 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. நாட்டில் 1.9 கோடி பேரிடம் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications