ஆமா.. யாரு சவுக்கிதார்..? உச்சநீதிமன்றம் பளிச் கேள்வி
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது, 'யார் சவுக்கிதார்' என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
ரபேல் விவகாரத்தில், பிரதமரை திருடன் என்று பொருள்படும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதற்கு ரபேல் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்று அவர் மேற்கோள் காட்டி தேர்தல் பொதுக் கூட்டங்களில் தொடர்ந்து பேசி, வருகிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
ஆனால் உச்சநீதிமன்றம் அதுபோன்று எந்த வார்த்தையும் சொல்லாத நிலையில், ராகுல் காந்தி உச்சநீதிமன்ற மாண்பை குலைப்பதாகவும், பிரதமருக்கு களங்கம் கற்பிப்பதாகவும், பாஜகவை சேர்ந்த மீனாட்சி லேகி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

விசாரணை
இன்று வழக்கு விசாரணை வந்தபோது, நீதிமன்ற அவமதிப்பு புகாரை ரத்து செய்ய ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கோரிக்கைவிடுத்தார். ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், ராகுல் காந்திக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, வழக்கை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

ராகுல் காந்தி வருத்தம்
வாதத்தின்போது அபிஷேக் சிங்வி கூறுகையில், ராகுல் காந்தி ஏற்கனவே, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுடன், தனது அரசியல், குற்றச்சாட்டையும், சேர்த்து அவர் கூறியிருந்தார். எனவேதான் 'சவுக்கிதார் சோர் ஹே' என கூறியிருந்தார். அதேநேரம், உச்சநீதிமன்றம், ரபேல் விஷயத்தில் தவறே இல்லை என தீர்ப்பு வழங்கிவிட்டதாக, பிரதமர் நரேந்திர மோடி, பொய் பிரச்சாரம் செய்து வருகிறார், என்றார்.

சவுக்கிதார் யார்
அப்போது, 'யார் சவுக்கிதார்' என்ற கேள்வியை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் எழுப்பினார். சவுக்கிதார் என்றால் காவலாளி என பொருள். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவினர் தங்களை தேசத்தின் சவுக்கிதார்கள் என அழைக்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்படி ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். ரஞ்சன் கோகாயுடன், நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சஞ்சிவ் கன்னா ஆகியோரும் இந்த அமர்வில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications