ஆமா.. யாரு சவுக்கிதார்..? உச்சநீதிமன்றம் பளிச் கேள்வி
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது, 'யார் சவுக்கிதார்' என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
ரபேல் விவகாரத்தில், பிரதமரை திருடன் என்று பொருள்படும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதற்கு ரபேல் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்று அவர் மேற்கோள் காட்டி தேர்தல் பொதுக் கூட்டங்களில் தொடர்ந்து பேசி, வருகிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
ஆனால் உச்சநீதிமன்றம் அதுபோன்று எந்த வார்த்தையும் சொல்லாத நிலையில், ராகுல் காந்தி உச்சநீதிமன்ற மாண்பை குலைப்பதாகவும், பிரதமருக்கு களங்கம் கற்பிப்பதாகவும், பாஜகவை சேர்ந்த மீனாட்சி லேகி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

விசாரணை
இன்று வழக்கு விசாரணை வந்தபோது, நீதிமன்ற அவமதிப்பு புகாரை ரத்து செய்ய ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கோரிக்கைவிடுத்தார். ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், ராகுல் காந்திக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, வழக்கை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

ராகுல் காந்தி வருத்தம்
வாதத்தின்போது அபிஷேக் சிங்வி கூறுகையில், ராகுல் காந்தி ஏற்கனவே, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுடன், தனது அரசியல், குற்றச்சாட்டையும், சேர்த்து அவர் கூறியிருந்தார். எனவேதான் 'சவுக்கிதார் சோர் ஹே' என கூறியிருந்தார். அதேநேரம், உச்சநீதிமன்றம், ரபேல் விஷயத்தில் தவறே இல்லை என தீர்ப்பு வழங்கிவிட்டதாக, பிரதமர் நரேந்திர மோடி, பொய் பிரச்சாரம் செய்து வருகிறார், என்றார்.

சவுக்கிதார் யார்
அப்போது, 'யார் சவுக்கிதார்' என்ற கேள்வியை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் எழுப்பினார். சவுக்கிதார் என்றால் காவலாளி என பொருள். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவினர் தங்களை தேசத்தின் சவுக்கிதார்கள் என அழைக்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்படி ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். ரஞ்சன் கோகாயுடன், நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சஞ்சிவ் கன்னா ஆகியோரும் இந்த அமர்வில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கண்ணீருடன் தீர்ப்பு சொன்ன உச்சநீதிமன்ற நீதிபதி.. இளைஞரை கருணை கொலை செய்ய அனுமதித்தபோது உருக்கம் -
13 ஆண்டு கோமா.. 32 வயது இளைஞரை கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி.. நாட்டிலேயே முதல் முறை -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
"பொது சிவில் சட்டம் தான் ஒரே தீர்வு.." முஸ்லீம் பெண்கள் பிரச்சனை.. அழுத்தமாக சொன்ன உச்ச நீதிமன்றம் -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங்












Click it and Unblock the Notifications