ஏன் ஓட்டுப் போடலை? மாஜி மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா எம்பிக்கு நோட்டீஸ் அனுப்பிய பாஜக!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 5-வது கட்ட லோக்சபா தேர்தலில் வாக்காளிக்காதது ஏன் என கேள்வி கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா எம்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பாஜக.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா. வாஜ்பாய்- அத்வானி காலத்தில் பாஜகவின் சீனியர்களில் ஒருவராக இருந்தவர். பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக பதவி வகித்தார். 1998, 1999, 2009 லோக்சபா தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். 1998-ம் ஆண்டு நாட்டின் மத்திய நிதி அமைச்சராக இருந்தார். பின்னர் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். பாஜகவின் தேசியத் துணைத் தலைவராக இருந்த நிலையில் 2018-ம் ஆண்டு பாஜகவை விட்டே வெளியேறினார் யஷ்வந்த் சின்ஹா.

Why Not Vote BJP issues show cause notice to Ex Union Minister Jayant Sinha MP

2021-ம் ஆண்டு மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த யஷ்வந்த் சின்ஹா அக்கட்சியின் துணைத் தலைவரானார். 2022-ம் ஆண்டு எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக களமிறக்கப்பட்டார் யஷ்வந்த் சின்ஹா. அத்தேர்தலில் 35.97% வாக்குகளை மட்டும் பெற்று தற்போதைய ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தோற்றார் யஷ்வந்த் சின்ஹா.

யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹாவும் பாஜகவில் இருந்தார். 2014, 2019 லோக்சபா தேர்தல்களில் யஷ்வந்த் சின்ஹா வென்ற அதே ஹசாரிபாக் தொகுதியின் எம்பியானார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றார். சில மாதங்களுக்கு முன்னர் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த ஜெயந்த் சின்ஹா, பருவநிலை மாற்றம், சூழல் மேம்பாடு குறித்த பணிகளில் கவனம் செலுத்துவேன் என அறிவித்தார்.

தற்போதைய லோக்சபா தேர்தலில் ஹசாரிபாக் தொகுதியில் ஜெயந்த் சின்ஹாவுக்கு போட்டியிட வாய்ப்புதரப்படவில்லை. இந்நிலையில் சில நாட்களில் ஜெயந்த் சின்ஹா மகன் ஆஷிஸ் சின்ஹா, "இந்தியா" கூட்டணியில் பேரணியில் பங்கேற்றார். மேலும் காங்கிரஸில் ஆஷிஸ் சின்ஹா இணைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

லோக்சபா தேர்தலின் 5-வது கட்ட தேர்தலில் ஹசாரிபாக் தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப் பதிவு நேற்று முடிவடைந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில பாஜக, மாஜி மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதில், தேர்தல் பணிகளிலும் முழுமையாக ஈடுபடவில்லை. நேற்றைய வாக்குப் பதிவின் போது வாக்களிக்கவும் செல்லவில்லை. இதற்கான காரணங்களை 2 வாரங்களில் தெரிவிக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வாக்களிக்காததால் முன்னாள் மத்திய அமைச்சருக்கு பாஜக நோட்டீஸ் அனுப்பியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+