புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் குளிர்கால கூட்டத்தொடர்.. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்..!
டெல்லி: நடப்பு ஆண்டுக்கான குளிர்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய நாடாளுமன்ற கட்டிடம் டெல்லியில் கட்டப்பட்டு வருகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவை, அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கான அலுவலகங்கள், கூட்ட அரங்குகள், உணவு கூடங்கள் என ஏராளமான வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

2022ம் ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் என கட்டுமான பணிகள் தொடங்கியது முதல் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை புதிய நாடாளுமன்றத்துக்கு மாற்றுவதன் மூலம் மத்திய பாஜக அரசுக்கு இது முக்கிய சாதனையாக பார்க்கப்படும்.
இதற்கான கட்டுமான பணிகளை அக்டோபர் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டது. இதன் முன்னேற்றப் பணிகள் ஒவ்வொரு வாரமும் ஒப்பந்தகாரர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுடன் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் இருக்கைகள், மேசைகள் எல்லாம் வெவ்வேறு இடங்களில் தயாராகி வருகின்றன. பணிகளை முடிப்பதில் உள்ள சிரமத்தை நீக்க தீவிர ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நடப்பு ஆண்டின் குளிர்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய நாடாளுமன்றக் கட்டிடம் இந்தியாவின் நம்பிக்கையை வெளிப்படுத்தும். பழைய கட்டடத்துடன் ஒப்பிட்டால் தொழிற்நுட்ப ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியிலும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் நவீனமாக இருக்கிறது. குளிர்கால கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்த முயற்சித்து வருகிறோம்.
நிர்ணயிக்கப்பட்ட காலத்தைவிட கட்டிட பணிகள் ஒருவாரம் மட்டுமே பின்தங்கியிருக்கிறது. அதுவும் விரைவில் சரி செய்யப்படும். கட்டிடத்தின் கூம்பு கட்டுமான பணி அடுத்து வரும் 10, 15 நாட்களில் முடிந்துவிடும். முழுமையான பணிகள் முடிந்து வரும் அக்டோபர் மாதம் 30ம் தேதி கட்டிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications