'சான்ஸே இல்லை' .. 'காந்தி' குடும்பம் இல்லாமல் காங்கிரஸா? - முக்கியத் தலைவர்கள் சொல்வது என்ன?
டெல்லி: 'காந்தி' குடும்பம் இல்லாத காங்கிரஸ் கட்சியை நினைத்துகூட பார்க்க முடியாது என கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.ஷிவகுமார் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட ஐந்து மாநிலத்தில் நடந்துமுடிந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பஞ்சாப் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து நீக்கி, ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைமை சரியில்லாததால் தான் இந்த தோல்வி என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஷிவகுமார்
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இதுகுறித்து கூறுகையில், ''காங்கிரஸ் தொண்டர்களை காந்தி குடும்பம் இல்லாமல் ஒன்றினைக்க முடியாது. காந்தி குடும்பம் தான் கட்சியை ஒற்றுமையாக வைத்திருக்கிறது. இந்த கட்சியின் தூண்கள் காந்தி குடும்பத்தினர். அவர்கள் இல்லாமல் காங்கிரஸ் கட்சி நடத்துவது கஷ்டமான காரியம்.

உத்தரப்பிரதேசம்
நடந்து முடிந்த உத்தரப்பிரதேச தேர்தலில், பிரியங்கா காந்தி மிகக்கடுமையாக பிரசாரம் செய்தார். கட்சி வெற்றிபெற அதிக உழைப்பைக் கொடுத்தார். ஆனால், நாங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. இந்த மக்களுக்கு எங்களை புரியவில்லை. அவர்களுக்கு இந்த தேர்தலில் புரியவைக்க முயற்சி செய்தோம். ஆனாலும் தோற்றுவிட்டோம்.

காந்தி குடும்பம்
கட்சிக்குள்ளேயே போட்டி பொறாமை இருக்கிறது. பதவிக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் கட்சியை விட்டு போகலாம். சொந்த பலனுக்காக கட்சயில் இருந்தால் சென்றுவிடுங்கள். எங்களுக்கு அதிகாரத்தில் நம்பிக்கை இல்லை. நாங்கள் காங்கிரஸ் கட்சிக்கு நேர்மையாக இருக்கிறோம். காங்கிரஸின் கொள்கைகளில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். எப்போதும் காந்தி குடும்பத்தின் பக்கம் நிற்போம்'' என்று கூறியுள்ளார்.

ஜி 23
காங்கிரஸின் 23 தலைவர்களைக் கொண்ட குழு (ஜி-23) சோனியா காந்திக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் மற்றும் கட்சியின் நாடாளுமன்ற வாரியத்திற்கான தேர்தல்கள் உட்பட பல அமைப்பு சீர்திருத்தங்களை வலியுறுத்தி 2020ல் கடிதம் எழுதியிருந்தனர். இந்த கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் இந்த தோல்வி என காங்கிரஸ் கட்சியினரே தெரிவிக்கின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications