கணக்கே தெரியல.. மாணவர்கள் பெயரை வெளியிட்ட தருமபுரி ஆட்சியர்! ஆசிரியர் “பிட்” எழுதியதாக புகார்
தருமபுரி: அரசுப் பள்ளியில் காலாண்டு தேர்வு எழுதி வந்த மாணவர்களுக்கு அடிப்படை கணக்கே தெரியவில்லை என்றும், ஆசிரியர் கரும்பலகையில் விடைகளை எழுதியதாகவும் மாவட்ட ஆட்சியர் மாணவர்களின் பெயரை குறிப்பிட்டு கடிதம் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் காலாண்டு பருவத் தேர்வுகள் ஒன்றாம் வகுப்பு தொடங்கி 12 ஆம் ஆம் வகுப்பு வரை நடைபெற்று வருகின்றன. கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கிய காலாண்டு தேர்வுகளை 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளக்கல்வித்துறை உத்தரவிட்டது.
தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் விறுவிறுப்பாக காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில், பல பள்ளிகள் வட்டார, மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர்
அந்த வகையில் நேற்று தருமபுரி மாவட்டம் பிக்கனஅள்ளி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது காலாண்டு தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய பள்ளி மாணவர்களிடம் வினாதாளில் இருந்து கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், அவர்களுக்கு அடிப்படை கணிதமே தெரியவில்லை என 3 மாணவர்களின் பெயரை குறிப்பிட்டு, தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஆட்சியர் கடிதம் எழுதி விளக்கம் கேட்டுள்ளார்.

ஆட்சியர் கடிதம்
இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், "தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பிக்கனஅள்ளி ஊராட்சியில் இன்று (28.09.2022) முற்பகல் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது கண்டறியப்பட்ட பின்வரும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து ஒருவார காலத்திற்குள் அறிக்கை அனுப்பி வைக்க வேண்டியது.

பள்ளி மாணவர்கள்
காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பிக்கனஅள்ளி ஊராட்சியில் மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த பின்வரும் மாணவர்கள் 2022 ஆம் ஆண்டு காலாண்டுத் தேர்வு கணக்குத் தாள் தேர்வினை எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். மாணவர்களை சந்தித்து தேர்வு குறித்து வினாத்தாளிலிருந்து கணிதம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டதில் மாணவர்களுக்கு அடிப்படை கணிதம் அறிவு இல்லை என தெரிய வந்தது.

பிட் எழுதிய ஆசிரியர்
இவ்வாறான நிலையில், மாணவர்களிடம் எப்படி தேர்வு எழுதினீர்கள் என்று கேட்ட பொழுது, தொடர்புடைய ஆசிரியர் கரும்பலகையில் வினாவிற்கான பதிலை எழுதி வைத்ததாகவும், அதைப் பார்த்து தேர்வு எழுதி திரும்பியதாகவும் பதிலளித்தனர். மாணவர்களுக்கு கணிதத்தை முறையாக சொல்லிக் கொடுத்து, அவர்களின் கல்வி அறிவு மேம்பட இல்லம் தேடி கல்வி மையங்களில் சீரிய முறையில் கற்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

மாணவர்கள் பெயர்
இந்த கடிதத்தில் 8 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவரின் பெயர்களை மாவட்ட ஆட்சியர் சாந்தி குறிப்பிட்டு இருந்தார். இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆட்சியர் எழுதிய கடிதத்தில் மாணவர்களின் பெயரை குறிப்பிட்டதற்கு ஆசிரியர்களும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி












Click it and Unblock the Notifications